India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வந்த், ஆலந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு காவலர் குடியிருப்பில் உள்ள அத்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவனை, அதே குடியிருப்பில் உள்ள சைபீரியன் ஹஸ்கி இன வளர்ப்பு நாய் கடித்தது. இதில் சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக அமுல் நிறுவனம் தயிர், லஸ்ஸி உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இரண்டு மாதங்களில் பால் விற்பனையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அமுல் வரவால் ஆவினின் பால் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. முன்னதாக, அமுல் பால் விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், காமராஜர் நினைவிடத்தை இடுகாடு போல வைத்திருப்பதாக, தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமராஜரின் பெருமை தெரியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரது நினைவிடத்தை முறையாக பராமரிக்கவில்லை எனவும், அவர்கள் மீது புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழக பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு ₹20லிருந்து ₹200, தனிமனைக்கான கட்டணம் ₹200லிருந்து ₹1000, பிரமாணப் பத்திரப் பதிவு, ஒப்பந்தம் பதிவு கட்டணம் ₹20லிருந்து ₹2000, செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு ₹4,000லிருந்து ₹10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகத் தயாராகவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கையும் படமாகத் தயாராகவுள்ளது. கவினின் ‘ஸ்டார்’ படத்தை இயக்கியுள்ள இளன், இப்படத்தை இயக்க அவரிடம் ஒன் லைன் கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார். இதனால், யுவன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
▶ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமன் மணலில் லிங்கம் செய்து வழிபட்ட ‘ராமேஸ்வரம், ஶ்ரீ ராமநாதசுவாமி கோயில்’ ▶கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் இருக்கும் ‘பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில்’ ▶அகநானூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களை எடுத்துரைக்கும் ‘திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில்’ ▶220 அடியில் பிரமாண்ட ராஜகோபுரத்தைப் பெற்றிருக்கும் ‘ஶ்ரீரங்கம், அரங்கநாதர் கோயில்’
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக நேற்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு சாதனை படைக்க இருந்தார். ஆனால், விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 17ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை., உடன் இணைந்து கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில் இத்தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் (காலை 10 மணி வரை) 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின்துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா என பாமக தலைவர் அன்புமணி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்திற்கு 12 -16 மணி நேரம் மும்முனை மின்சாரமும், கடைமுனை நுகர்வோருக்குச் சீரான மின்சாரமும் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் என அவர் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.