India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல்கட்ட தேர்தலே சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இன்றைய வாக்குப்பதிவின் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்தது தெளிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் உலகப் பொருளாதாரம் 2050ஆம் ஆண்டுக்குள் 19% வீழ்ச்சியடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் வருவாயைப் பொறுத்தமட்டில், 22% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலக சராசரியை விட 3% அதிகமாகும். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் வருவாய் 11% சரியும் எனக் கூறப்படுகிறது. உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு 38 டிரில்லியன் டாலர்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் ஐஸ் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சமீபத்தில் திரிசூல், திரிஷா என்ற தனது குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐஸ் சாப்பிட்டதே மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னரே காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பஹத் ஃபாசில் தயாரிப்பில் கிரிஷ் AD இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ‘பிரேமலு’. கேரளா மட்டுமின்றி இப்படம் தமிழ்நாட்டிலும் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு (2025) வெளியாகும் இப்படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என மறுக்கவோ, பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வரும்போது அனைத்து பொருட்களையும் வழங்க அறிவுறுத்திய தமிழக அரசு, பொருட்களை தடையின்றி அனுப்ப TNCSC-யை கேட்டுக்கொண்டுள்ளது.
உலக கல்லீரல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியர்களிடையே ஏற்படும் கல்லீரல் நோய்களில் மூன்றில் ஒரு பங்கு ஹெபடைடிஸ் B வகை தொற்றால் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஹெபடைடிஸ் B தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் இந்தியர்கள் 2ஆவது இடத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை இந்த நோய்த் தொற்று பாதிக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவிற்கு ரயிலில் சென்ற அந்த பெண்ணிடம் கேரள இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின் திருவனந்தபுரத்தில் ரயில் நின்றதும் அவர் தப்பியோடிய நிலையில், அந்த பெண் ரயில்வே போலீசிடம் புகார் அளித்துள்ளார். CCTV வீடியோ காட்சி அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகளை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் காரணமாக இஸ்ரேலில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் இடையே தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5-6 வரை கடைசி ஒரு மணி நேரத்தில் 10% வரை வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக மாலை வேளையில் ஆர்வத்துடன் சென்ற மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019 தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவானது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 176/6 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்த சிஎஸ்கே அணியில் ஜடேஜா மட்டுமே பொறுமையாக ஆடி 57* ரன்கள் சேர்த்தார். ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய மொயீன் அலி 30, ரஹானே 36, தோனி 28* ரன்கள் எடுத்தனர். LSG சார்பில் க்ருனால் பாண்டியா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Sorry, no posts matched your criteria.