India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK அணிக்கு எதிரான ஆட்டத்தில் LSG அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 34ஆவது போட்டியில், டாஸ் வென்ற LSG பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து முதலில் பேட்டிங் செய்த CSK அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து 177 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய LSG அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் கோடை வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. கோடை வெயில் மென்மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், கோடை முடியும் வரையில் கருப்பு அங்கியிலிருந்து விடுதலை வேண்டி நீதிமன்றத்தை நாடியிருந்தனர். வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள நீதிபதிகள், ஜூன் 9 வரை வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய விலக்கு அளித்துள்ளனர்.
பாஸ்வேர்ட் பகிர்வு வசதியைத் தடை செய்த பிறகு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 93.3 இலட்சம் கூடுதல் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாத முடிவில் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 26.96 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு, சுமார் 10 கோடி பேர் சந்தா செலுத்தாமல் இலவசமாக அச்சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அமேசான் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 23 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (ஏப்ரல் 20) மாலை 4:30க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3:50க்கு எழும்பூரை வந்தடையும். அதேபோல், நாளை (ஏப்.20) அதிகாலை 5:30க்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரயில் பிற்பகல் 1:20க்கு எழும்பூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் இருக்கும். ஆனால், மேஷம், மகரம், கும்பம் ஆகிய 3 ராசியினர் இந்த யோகத்தின் பலன்களை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். குபேரனே நேரில் வந்து உதவுவது போல இந்த 3 ராசியினருக்கு பண பாக்கியம் கிடைக்கவுள்ளது. தொழிலில் விருத்தி, பதவி உயர்வு, சம்பள உயர்வு, வியாபாரத்தில் லாபம் ஆகியவை எளிதாக கிடைக்கும்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானின் அணுசக்தி தளங்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமையை மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ மோதல்களில் அணுமின் நிலையங்கள் ஒருபோதும் இலக்காக இருக்கக்கூடாது என இரு நாடுகளுக்கும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் 31 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது அதிரடியால் LSG 10.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்துள்ளது. மற்றொரு வீரர் டி காக் 41* ரன்களுடன் ஆடி வருகிறார். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
திருமண வாழ்க்கையின் சிக்கல்களை ஆராயும் ‘தோ அவுர் தோ பியார்’ என்ற படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது திருமண வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் குறித்து பகிர்ந்து கொண்டார். திருமணம் என்பது கணவன், மனைவி என்ற இரண்டு நபர்களுக்கு இடையே இருக்க வேண்டும். அதில், குடும்பம் வரக் கூடாது. மேலும், திருமணத்தில் தனியுரிமையும் முக்கியம் எனத் தெரிவித்தார்.
லக்னோ அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்ட தோனி 16 ரன்கள் விளாசினார். இதுவரை கடைசி ஓவரில் மட்டுமே 313 பந்துகளை எதிர்கொண்ட அவர், 772 ரன்கள் குவித்துள்ளார். இதில் 53 பவுண்டரிகள், 65 சிக்ஸர்களுடன் 246.64 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். தோனியின் அதிரடி பேட்டிங்கை பார்ப்பதற்காகவே சிஎஸ்கே ரசிகர்கள் கடைசி ஓவர் வரை காத்திருக்கின்றனர்.
வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம் வேலை நாளாக கணக்கில் கொள்ளப்பட்டு, அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்ததாக கணக்கிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பினை தற்போது அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.