India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அளவில் எந்தவொரு கூட்டணியிலும் இணையப் போவதில்லை என்று மிசோரம் முதல்வரும் மக்கள் முன்னணி தலைவருமான லால்டுகோமா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் எங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறோம். டெல்லியில் இருந்து யாரும் எங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், எப்போதும் போல சுதந்திரமாக செயல்படவே விரும்புகிறோம் எனக் கூறினார்.
தேர்தலுக்கு மத்தியிலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருகிறது என்று ஐ.எம்.எஃப் ஆசிய-பசிபிக் துறை இயக்குநர் கிருஷ்ண சீனிவாசன் பாராட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், மற்ற நாடுகளில் தேர்தல் ஆண்டில் நிதியை தாறுமாறாக பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்தியாவில் அப்படி நடக்கவில்லை. இத்தகைய காரணங்களால் இந்தியப் பொருளாதாரம், தொடர்ந்து உலகத்திலேயே பிரகாசமான இடத்தில் இருக்கும் என்றார்.
சிறுநீரகத்தில் உள்ள கற்கள் & நச்சுக்களை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்த (Detox) இளநீர் ஊறலை பருகலாம் என்று மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கப்போகும் முன் இளநீரை வெட்டி, அதில் நெருஞ்சில் & வெள்ளரி விதைகளை போட்டு மூடிவிடவும். 12 மணி நேரம் கழித்து, அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்து வந்தால் போதும், உடல்சூடு தணிவதுடன் சிறுநீரகக் கோளாறுகளும் நீங்கும்.
கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பான் இந்தியா முறையில் ‘சர்தார் 2’ படம் உருவாக இருப்பது தெரிந்ததே. கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தின் கதைக்களம் இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் போதை மாஃபியா கும்பல்களைப் பற்றிய அதிர்ச்சிகர செய்திகளை போட்டு உடைக்கும் வகையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வடிவமைத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
பிறந்து ஐந்தே மாதங்களான பச்சிளம் குழந்தை ஒன்று ₹4.2 கோடியை ஈட்டியுள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? தனது பேரக் குழந்தையான எக்கிராஹா ரோஹனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி ₹240 கோடி மதிப்பு கொண்ட 15 லட்சம் பங்குகளை பரிசாக கொடுத்திருந்தார். அவற்றுக்கான 2024 நிதியாண்டுக்கான சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.28 (20+8) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவருக்கு ₹4.2 கோடி கிடைக்க உள்ளது.
➤1534 – யாக்குவஸ் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். ➤1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் ரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர். ➤1939 – ஈழத்து எழுத்தாளர் பிரமீள் பிறந்த நாள். ➤1946 – லீக் ஆஃப் நேஷன் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐ.நா அவைக்கு வழங்கப்பட்டன. ➤1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
ஐ.பி.எல் தொடரில் அசத்தும் சஞ்சு சாம்சன் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர் இந்திய டி20 அணிக்கு அவசியம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர் முக்கிய வீரராக இருப்பதை நான் விரும்புகிறேன். அது போலவே ரிங்கு சிங்கை தேர்வுக் குழுவினர் மறந்து விடக் கூடாது என்றார்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பாஜகவை போன்று அதிகளவில் பொய் சொல்லக் கூடிய கட்சி வேறெதுவும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். கவுதம் புத் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக முழுமையாக தோற்கும் என்றே தகவல்கள் வருகின்றன. பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய பொய்யர்களான மோடி, அமித்ஷா சொல்வதை மக்கள் கேட்க விரும்பவில்லை என்றார்.
தூர்தர்ஷன் DD News இந்திச் செய்தி தொலைக்காட்சி லோகோவை மத்திய அரசின் நிறுவனமான பிரசார் பாரதி மாற்றியிருக்கிறது. சிவப்பு நிறத்திலிருந்து காவி வண்ணத்திற்கு தூர்தர்ஷனின் லோகோவை மாற்றிய தகவல் & ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. மக்களுக்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் ஊடகத்தை பாஜகவின் பிரசார ஊர்தியாக மாற்ற வேண்டாம் என நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 6
▶குறள்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
▶பொருள்: தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைவனுடைய திருவடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
Sorry, no posts matched your criteria.