India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரோஹித் ஷர்மாவை வாங்குவது தொடர்பான வதந்திகளுக்கு, நடிகை ப்ரீத்தி ஜிந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். MI-க்கு எதிரான போட்டிக்கு பிறகு, ரோஹித்தை PBKS அணி வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், இது முற்றிலும் தவறான ஒரு செய்தி. எங்கள் அணியின் கேப்டன் ஷிகர் தவன் காயத்தில் இருக்கும் இந்த சூழலில், இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடியில் 7 மணிக்கு 70.95% வாக்குப்பதிவு எனக் கூறப்பட்ட நிலையில் 12 மணிக்கு 59.96%ஆகவும், டி.ஆர்.பாலு போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூரில் 69.79%லிருந்து 60.21%ஆகவும், அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் 71.17%லிருந்து 64.81ஆகவும், தமிழிசை போட்டியிட்ட தென்சென்னை தொகுதியில் 67.82ஆக இருந்த வாக்கு சதவிதம் 54.27%ஆகவும் குறைந்துள்ளது.
அன்புமணி மனைவி சௌம்யா போட்டியிட்ட தருமபுரியில் நேற்றிரவு 7 மணிக்கு 75.44% வாக்குப்பதிவு என கூறப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு 81.48%ஆக அதிகரித்துள்ளது. ஜோதிமணி போட்டியிட்ட கரூரில் 7 மணிக்கு 74.05%ஆக இருந்த வாக்கு சதவீதம்12 மணிக்கு 78.61%ஆகவும், சேலத்தில் 73.55%ஆக இருந்த வாக்கு சதவீதம் 78.13%ஆகவும், நாமக்கலில் 74.29%ஆக இருந்த வாக்கு சதவீதம் 78.16%ஆக உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.55,080க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,885க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருகிராம் வெள்ளி ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனையாகிறது.
சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பிசிசிஐ அபாரதம் விதித்துள்ளது. பந்துவீச்சின் போது, இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டன. இதனால் ஸ்லோ ஓவர் ரேட் (Slow Over Rate) விதியை மீறியதாக, இரு அணிகளுக்கும் தலா ரூ.12 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ அதிரடியாக உத்தரவிட்டது. இரு அணிகளுக்கும் இது முதல் அபராதம் ஆகும்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வாக்காளர்கள் தாங்கள் வாக்கு செலுத்தியதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வாக்குச்சாவடியில் செல்போன் கொண்டுச் செல்ல அனுமதி இல்லாதபோது வீடியோ எடுத்தது எப்படி? என பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. நேற்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் செல்போன் எடுத்துச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் பார்வை ஒருவர் மீது பட்டால் கடும் துயரம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். அத்தகைய சனி பகவானையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் பெருமாள். ஆதலால் சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்தால், சனி பகவானின் தாக்கம் குறையும். சனிக்கிழமை அன்று முழு விரதம் இருந்து அவரை மனமுருக வேண்டினால், வறுமை ஒழிந்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
கடந்த 28 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்களிக்காத முதல் தேர்தலாக நேற்று நடந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது. 1996ல் கரூர் யூனியன் கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை அவர் தொடங்கினார். அப்போது முதல் 2021 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும், செந்தில் பாலாஜி அவரது சொந்த ஊரான, ராமேஸ்வரபட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் காலையிலேயே முதல் ஆளாக குடும்பத்துடன் சென்று வாக்களிப்பது வழக்கம் ஆகும்.
சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில், லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 9 Four, 3 Six என விளாசி 82(53) ரன்கள் குவித்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடித்தார். இதன்படி, கே.எல்.ராகுல்-25, தோனி-24, குயின்டன் டி காக்-23 என அடுத்தத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு வியக்கச் செய்யும் வகையில் இருக்கும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முதல்கட்டத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதாகக் கூறினார். மேலும், 23 ஆண்டுகளாக விடுப்பு இல்லாமல் தாய்நாட்டுக்காக மோடி உழைப்பதாகவும், ராகுல் 3 மாதத்துக்கு ஒருமுறை தாய்லாந்து செல்வதாகவும் அவர் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.