India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமித் ஷா தனக்கு ₹36 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். காந்திநகர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்துள்ள வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், ₹20 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ₹6 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகக் கூறியுள்ளார். சொந்தமாக கார் இல்லை, ₹17 லட்சம் கடன் உள்ளது, வருடாந்தர சம்பளம் ₹ 75.09 லட்சம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஊழல் பள்ளியை மோடி நடத்திக் கொண்டிருப்பதாக ராகுல் சாடியுள்ளார். அவர் தனது X பதிவில், மோடி நாட்டில் ஊழல் பள்ளியை நடத்துவதாகவும், அதில் அவரே ஊழல் அறிவியல் பாட ஆசிரியராக வகுப்பெடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பாஜக தலைவர்களுக்கு அதனை பாஜக கட்டாய பாடமாக்கி இருப்பதாகவும், I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்பு அப்பள்ளி நிரந்தரமாக மூடப்படும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல மக்களவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குபதிவு தரவில் மிகப்பெரிய மாறுபாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இரவு 7 மணிக்கு வெளியாகும் வாக்குப்பதிவு விவரம், இரவு 12 மணி அறிக்கையுடன் ஒப்பிடும்போது 1% முதல் 1.5% வரை உயரும். ஆனால், இந்த தேர்தலில் 3% வரை குறைந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் இதுவரை வாய் திறக்கவில்லை. உடனே உரிய விளக்கமளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நகர்ப்புறங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். நகர்புறங்களில் 10இல் 4 பேர் வாக்களிக்கவில்லை என்று கூறிய அவர், அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்து, இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறித்த தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தென் சென்னையில் இரவு 7 மணி வரை 67.82% வாக்குப்பதிவு எனக் கூறப்பட்ட நிலையில், 12 மணிக்கு (13% குறைவு) 54.27% மட்டுமே வாக்குப்பதிவு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தென் சென்னைக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என முதல் ஆளாக வலியுறுத்திய பாஜக வேட்பாளர் தமிழிசை, பூத் ஏஜென்ட்களை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சேமிப்பு கணக்குகளுக்கான 17 சேவைக் கட்டணங்களை மே 1 முதல் ஐசிஐசிஐ வங்கி மாற்றவுள்ளது. நகர்ப்புற வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளுக்கான வருடாந்தரக் கட்டணம் ₹200ஆகவும், கிராமப் பகுதிகளுக்கு ₹99ஆகவும் மாற்றவுள்ளது. Imps மூலம் ₹1,000 வரை அனுப்ப ₹2.50 கட்டணம், ₹1,000 முதல் ₹25,000 வரை அனுப்ப ₹5 கட்டணம், ₹25,000 முதல் ₹5 லட்சம் வரை அனுப்ப ₹15 கட்டணமும் வசூலிக்கவுள்ளது.
ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களை அதிமுகவினர் எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர்கள், முகவர்கள், கூட்டணி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக WHOவின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில் 20% பேரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளது. மேலும், ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசையைக் கேட்பதால் 100 கோடி இளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்ல 2050இல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித்திறன் பாதிப்பு இருக்குமாம்.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் நேற்றிரவு 7 மணி, இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் மாறுபட்டுள்ளது. அதைப் பார்க்கலாம். இரவு 7மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் வடசென்னையில் 69.26%, இரவு 12 மணி அறிவிப்பில் 60.13% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் காஞ்சிபுரத்தில் 72.99%, இரவு 12 மணி அறிவிப்பில் 71.55% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி அறிவிப்பில் அரக்கோணத்தில் 73.92%, இரவு 12 மணி அறிவிப்பில் 74.08% வாக்குப்பதிவாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் வேலூரில் 73.04%, இரவு 12 மணி அறிவிப்பில் 73.42% வாக்குப்பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரவு 7 மணி அறிவிப்பில் திருவண்ணாமலையில் 73.55%, இரவு 12 மணி அறிவிப்பில் 73.88% வாக்குப்பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.