India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அரசு ரூ.1000 வழங்குகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை, (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.
பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது என காங். மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் வெறுப்பு பேச்சுக்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், தேர்தல் ஆணையம் அனுப்பியதை நோட்டீஸாகவே கருத முடியாது என்றார். மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வெட்கக்கேடானது எனவும் அவர் சாடினார்.
தமிழ்நாட்டில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை & திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் மேலலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய பகுதிகளில் 7 செமீ மழை பதிவாகியிருக்கிறது. விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவு மழை பெய்துள்ளது.
▶கிறிஸ் கெயில் – 357 (142 போட்டிகளில்) ▶ரோஹித் ஷர்மா – 276* (255 போட்டிகளில்) ▶விராட் கோலி – 258* (248 போட்டிகளில்) ▶ஏ.பி.டிவில்லியர்ஸ் – 251 (184 போட்டிகளில்) ▶எம்.எஸ்.தோனி – 248* (261 போட்டிகளில்) ▶டேவிட் வார்னர் – 236* (183 போட்டிகளில்) ▶கிரண் பொல்லார்டு – 223 (171 போட்டிகளில்) ▶ஆண்ரே ரஸல் – 207* (104 போட்டிகளில்) ▶சஞ்சு சாம்சன் – 205* (159 போட்டிகளில்) ▶சுரேஷ் ரெய்னா – 203 (205 போட்டிகளில்)
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பழுது ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 39 சிசிடிவி கேமராக்களில், தற்போது மழை மற்றும் பலத்த காற்றால் 7 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. இங்கு ஏற்கெனவே ஒரு முறை சிசிடிவி கேமரா பழுதான போது, மீண்டும் இது போன்று அசம்பாவிதம் நடக்காமல் கண்காணிக்கும்படி விசிக மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மருத்துவ விடுப்பு எடுத்து வருகின்றனர். இதனால் விமான சேவை பாதித்து, நேற்றிரவு 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ள ஏர் இந்தியா, முழுக் கட்டணத்தையும் திரும்பத் தருவதாகவும், மற்றொரு தேதியில் பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் விடுப்புக்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை.
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.
ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், இபிஎஸ் அதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சி சாதனை அல்ல, வேதனை. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்யாத, வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்று மாடல் அரசு என்று சாடிய அவர், 3 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடனாளியாக்கியதுதான் இந்த அரசின் சாதனை என குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான பாடங்களை மாணவர்கள் எளிமையாக காணொலி வாயிலாக கற்பதற்கும், கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.