news

News April 20, 2024

சந்திரபாபு நாயுடுவுக்கு ₹811 கோடி சொத்துகள்

image

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 5 ஆண்டில் 41% அதிகரித்து ₹811 கோடியாக உயர்ந்துள்ளது. 2019இல் இது ₹668 கோடியாக இருந்தது. இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் குப்பத்தில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ஹெரிடெஜ் நிறுவனத்தில் ₹764 கோடி மதிப்பு பங்குகள், ₹4.80 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ₹36.31 லட்சம் மதிப்பு அசையா சொத்து உள்ளிட்டவை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

News April 20, 2024

வேங்கைவயலில் மறுவாக்குப்பதிவு கிடையாது

image

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயல் உள்பட வேறெங்கும் மறுவாக்குப்பதிவு கிடையாது என அம்மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நடவடிக்கை இல்லை என வேங்கைவயல் மக்கள் நேற்று ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் மாலையில் அங்கு ஒருசிலர் மட்டும் வாக்களித்தனர்.

News April 20, 2024

சற்றுநேரத்தில் சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் குறித்து சற்று நேரத்தில் (3 மணிக்கு) தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். பல மக்களவைத் தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குபதிவு தரவில் மாறுபாடு இருந்தது. இந்த வித்தியாசம் ஏன் என்று இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கமளிக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் இதுதொடர்பாக சாகு விளக்கமளிக்கவுள்ளார்.

News April 20, 2024

விளம்பரங்களுக்கு ₹3,641 கோடி செலவிட்ட பாஜக அரசு

image

மத்திய அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024) தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ₹3,641 கோடி செலவிட்டது RTI மூலம் தெரிய வந்துள்ளது. அரசின் விளம்பரச் செலவு தொடர்பாக RTI கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, எஸ்எம்எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ₹667 கோடி செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இதில், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர், டிஜிட்டல் போஸ்டர் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்ட தொகைப் பற்றிய தகவல் இல்லை.

News April 20, 2024

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

image

மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய அதிமுக, தேமுதிகவினருக்கு பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாகப் பணியாற்றி உள்ளதாக கூறிய அவர், வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறினார். மேலும், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பை அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 20, 2024

IPL: கடைசி ஓவரில் அதிக ரன் குவித்த வீரர்கள்

image

ஐபிஎல் தொடரின் கடைசி (20ஆவது) ஓவரில் அதிக ரன் குவித்த வீரர்கள்: ▶தோனி 99 போட்டிகளில் – 772 ரன்கள், ▶பொல்லார்டு 62 போட்டிகளில் – 405 ரன்கள், ▶ஜடேஜா 75 போட்டிகளில் – 368 ரன்கள், ▶தினேஷ் கார்த்திக் 46 போட்டிகளில் – 292 ரன்கள், ▶ஹர்திக் பாண்டியா 41 போட்டிகளில் – 287 ரன்கள், ▶ரோஹித் ஷர்மா 28 போட்டிகளில் – 257 ரன்கள், ▶ஏ.பி.டிவிலியர்ஸ் 33 போட்டிகளில் – 225 ரன்கள், ▶பிராவோ 41 போட்டிகளில் – 213 ரன்கள்

News April 20, 2024

முறையாக வாக்குப்பதிவு நடக்கவில்லை

image

தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தென்சென்னை வேட்பாளர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். வாக்குச் சதவீதம் குறைந்தது கவலையளிக்கிறது எனக் கூறிய அவர், வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் தேர்தலை நடத்தக்கூடாது. வாரத்தின் முதல் கடைசி நாளில் தேர்தலை நடத்தினால், மக்கள் விடுமுறையில் சென்று விடுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.

News April 20, 2024

Breaking: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

News April 20, 2024

வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணை சோதனை

image

வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்திருப்பது தென்கிழக்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உடன் மோதல் போக்கு நீடிப்பதால், அந்நாடுகளை அச்சுறுத்த வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதன்படி, புதிதாக ஹவாசால் 1 ரா-3, பியோல்ஜி 1-2 ஆகிய 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.

News April 20, 2024

படப்பிடிப்பில் சிக்கியதால் சிம்பு வாக்களிக்கவில்லை

image

படப்பிடிப்பில் சிக்கிக் கொண்டதால் தான், நடிகர் சிம்புவால் வாக்களிக்க முடியாமல் போனதாக தகவல் கசிந்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்ததால், நேற்று நடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் அவர் பங்கேற்கவில்லை. ராஜஸ்தானில் நடந்து வரும் படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசனும் விரைவில் இணையவுள்ளார். படத்தை 2025இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!