India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேங்கைவயல் விவகாரத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு குடல் மாதிரி பரிசோதனை தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே 6 சிறுவர்கள் உள்பட 31 பேருக்கு மரபணு பரிசோதனையும், இருவருக்கு குடல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
காலாவதியான மதுபானம், பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவு பறந்துள்ளது. சீர்காழியில் காலாவதியான மது குடித்த 2 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களே!, சரக்கை வாங்கிய உடன், காலாவதி தேதியை (EXPIRY DATE) செக் பண்ணுங்க.
▶குடிநீர் வசதி, கழிவறை வசதி, நூலக வசதி, உணவு வசதி உள்ளதா? ▶கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு எப்படி உள்ளது? ▶அந்த கல்லூரியில் படித்த எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? ▶விளையாட்டு மைதானம் உள்ளதா? ▶நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் எத்தனை மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பட்டம் பெற்றுள்ளார்கள்? ▶கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.
நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் கரிம்நகரில் பிரசாரம் செய்த அவர், காங்கிரஸும், பிஆர்எஸ்ஸும் வேறல்ல, அவற்றை ஊழல் இணைக்கிறது என்றார். இரு கட்சிகளும் ‘முதலில் குடும்பம்’ என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளதாகக் கூறிய அவர், ‘முதலில் தேசம்’ என்ற கொள்கையுடன் பாஜக செயல்படுவதாகக் கூறினார்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமாரின் எலும்புகளை காவல்துறை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஜெயக்குமாரின் உடல் தானா என அவரது குடும்பத்தாருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில், தற்போது அவரது எலும்புகள் மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் டிஎன்ஏ அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
▶தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ ▶சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’ ▶சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘பட்டத்து அரசன்’ ▶சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடித்த ‘கென்னடி க்ளப்’ ▶ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ ▶மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்’
குஜராத், மும்பை, பஞ்சாப், பெங்களூரு ஆகிய 4 அணிகள், இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடும். 4 அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி 4 இடங்களில் உள்ளன. RCB, GT, PBKS ஆகிய அணிகளுக்கு தலா 3 போட்டிகளும், MI-க்கு 2 போட்டிகளும் மீதம் உள்ளன. எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றால் கூட, இந்த அணிகள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.
அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அரசு ரூ.1000 வழங்குகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை, (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.
பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது என காங். மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் வெறுப்பு பேச்சுக்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், தேர்தல் ஆணையம் அனுப்பியதை நோட்டீஸாகவே கருத முடியாது என்றார். மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வெட்கக்கேடானது எனவும் அவர் சாடினார்.
தமிழ்நாட்டில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை & திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் மேலலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய பகுதிகளில் 7 செமீ மழை பதிவாகியிருக்கிறது. விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவு மழை பெய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.