India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூருவைச் சேர்ந்த அருண் என்பவர், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட சைபர் கொள்ளையனுடன் Chat செய்துள்ளார். ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் பணமோசடி செய்யும் அந்த கொள்ளையன், எப்படியெல்லாம் மோசடி செய்கிறார் என்ற நுட்பத்தை அப்பாவித் தனமாக விவரித்துள்ளார். இறுதியில் அருணின் திட்டத்தை உணர்ந்து கொண்ட கொள்ளையன் காவல்துறையை அணுக வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வாட்ஸ்அப் Chat இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பந்த் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து SRH இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் SRH புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணி 6ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 69.46% வாக்குகள் பதிவான நிலையில் 30.54% மக்கள் வாக்களிக்கவில்லை. சேலம், கோவை, வேலூர், கள்ளக்குறிச்சியை தவிர்த்து, எஞ்சியுள்ள 35 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பதிவானதைவிட குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.
இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் தற்போது சிறப்பாக விளையாடி வந்தாலும், உலகக்கோப்பையில் என் பங்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்திய அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் எனக் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிவரும் தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 WC அணியில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் அட்டை’ வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறலாம். குடிசை வீட்டில் வசிப்போர், தினக்கூலிகள், நிலம் இல்லாத மக்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். PM JAY என்ற மொபைல் செயலி மூலம் வீட்டில் இருந்தே இந்த அட்டைக்கு விண்ணபிக்க முடியும்.
மாநில அரசுகள் ஆளுநரை எதிரியாக பார்ப்பது சரியல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசன பதவி. ஆனால், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த பதவிக்கு உரிய மரியாதையை ஆளும் அரசுகள் தருவதில்லை. மாநிலத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஆளுநரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இது ஆரோக்கியமான ஐனநாயகத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.
ஈரோடு, திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 43 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சத்தியமங்கலம், தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
ஜூன் 4ஆம் தேதி மோடிக்கு 440 வாட்ஸ் ஷாக் கிடைக்கப் போகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். 400 இடங்களை வெல்வோம் என மோடி கூறுகிறார். ஆனால், பாஜகவுக்கு ஷாக் அடிக்கும் தேர்தல் முடிவுகளை இந்திய மக்கள் தர தயாராகி வருவதாக தெரிவித்த அவர், பாஜகவும், மோடியும் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் என்பதை நாட்டுமக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக CBSE அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் ஸ்டடிஸ், டேட்டா அனாலிசிஸ் கேள்விகள் 40% இல் இருந்து 50% சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நீண்ட, விளக்கமாக பதில் தரக்கூடிய பாரம்பரிய கேள்விகளின் வெயிட்டேஜ் 40%இல் இருந்து 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது. Select response வகை மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளில் -MAQ (20%) மாற்றம் இல்லை.
செவ்வாழையில் அதிக அளவில் உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மாலைக்கண் நோய், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்து. 21 நாள்கள் செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டால் ஆடிய பல் கூட கெட்டியாகிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். நரம்புகள் பலம் அடையும்.
Sorry, no posts matched your criteria.