India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் அளிக்கப்பட்ட உணவில், கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலந்திருந்ததாக நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு வழக்குகளில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரானின் முறையீட்டை தொடர்ந்து, இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 8 ▶குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. ▶பொருள்: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
அமெரிக்காவில் டிக் டோக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. டிக் டோக் மூலம் பயனர்களின் தரவுகளை சீனாவின் Byte Dance நிறுவனம் பயன்படுத்தலாமென அச்சம் நிலவுகிறது. இப்புதிய மசோதாவின்படி, ஓராண்டுக்குள் சீன உரிமையாளர் டிக் டோக் பங்குகளை விற்காவிடில் டிக் டோக் செயலிக்கு தடை விதிக்கப்படும். இதனை,சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக Byte dance நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவின் திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றிப்பெற்றால் அதிக மகிழ்ச்சியடைவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை பலர் மீதும் கடுமையாக விமர்சிக்கும் அவர், தனது X பக்கத்தில், ‘பிற பாஜக வேட்பாளர்கள் எனக்கு பரிச்சயமானவர்கள் இல்லை. எனவே, அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது’ என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில் தொடங்க சரியான நேரம் இதுதான் என சர்வதேச நிறுவனங்களுக்கு OYO சிஇஓ ரிதேஷ் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். தனது X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நீங்கள் சர்வதேச நிறுவனமாகவோ, ஸ்டார்ட் அப் அல்லது தொழில்துறையில் இருந்து இந்தியா உங்கள் தேடலில் இல்லையென்றால் நீங்கள் மிகப்பெரிய ஒன்றை இழக்கிறீர்” எனவும், உலகின் திறமைகளின் தலைநகரமாக இந்தியா முன்னேறி வருகிறதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஏப்ரல் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பந்திக்கு முந்து படைக்கு பிந்து – வீரம் விளைந்த இடமான நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.
DC அணிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் SRH அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள RR அணி 6 வெற்றி, 1 தோல்வியுடன், 12 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. KKR அணி 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும், CSK அணி 8 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. DC அணி 6 புள்ளிகளுடன் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
*மாநில அரசுகள் ஆளுநரை எதிரியாக பார்ப்பது சரியல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். * கடந்த 10 ஆண்டுகளில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மத்திய அரசு ₹3,641 கோடி செலவிட்டுள்ளது *மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை. *இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தினேஷ் கார்த்திக் விருப்பம் * DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று (ஏப்ரல் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.