India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மரணமடைவதற்கு முன் காங்., தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்த ராஜா என்பவரைக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் ரூ.200 கோடி சொத்து உள்ளது. ரூ.30 லட்சத்திற்காக அவரைக் கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை என விளக்கமளித்த ஆனந்த ராஜா , கடிதத்தில் தனது பெயர் இருந்ததால், மும்பைக்கு சென்றதாகக் கூறினார்
2024 டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை, உகாண்டா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள உகாண்டா அணியை, கேப்டன் பிரையன் மசாபா வழிநடத்த உள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில், வரும் ஜூன் 2ஆம் தேதி இத்தொடர் தொடங்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகள், தங்களது வீரர்களின் விவரங்களை ஏற்கெனவே வெளியிட்டது.
ஸ்மார்ட் டிவி வாங்கும் போது, பலருக்கு எத்தனை இன்ச் டிவியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படும். அறையில் டிவி பொருத்தப்பட இருக்கும் இடத்திற்கும், நீங்கள் டிவியை அமர்ந்து பார்க்கும் இடத்திற்கும் இடையேயான இடைவெளியை 2ஆல் வகுத்தால் இதற்கான பதில் கிடைத்துவிடும். அதாவது, டிவிக்கும் நீங்கள் அமரும் இடத்துக்குமான இடைவெளி 110 இன்ச் எனில், நீங்கள் 55 இன்ச் டிவியை வாங்குவது சரியான தேர்வாக இருக்கும்.
காங். மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியின் போது, பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு இந்தியா சிறந்த உதாரணம் என்றார். இந்திய மக்கள் கிழக்கில் சீனர்களை போலவும், மேற்கில் அரேபியர்கள் போலவும், வடக்கில் வெள்ளையர்களைப் போலவும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாகத் தெரிவித்தார்.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், சிகிச்சையின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உரிய மருத்துவ வசதிகள் செய்த பின் மருத்துவமனையை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏனைய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அப்போது, மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் தோனி காயத்துடன் விளையாடி வருவதாக ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். அதேநேரம், காயத்துடன் விளையாட வேண்டிய தேவை என்ன என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவினாஷ் ராவ் என்ற இளம் விக்கெட் கீப்பர் அணியில் இருக்கும்போது தோனி ஓய்வெடுக்காமல் விளையாடுவது ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
பதவியில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டதை, மோடி உணர்ந்துள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஹாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சர்வாதிகார அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இதனால் அச்சத்தில் பதற்றம் அடைந்துள்ள மோடி, தொடர்ந்து பொய் பிரசாரம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்துக்கு (கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் நீலகிரிக்கு படையெடுத்து வருவதால், இந்தாண்டு மலர் கண்காட்சி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.