India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தானிற்கு பேலிஸ்டிக் ஏவுகணை கருவிகளை வழங்கிய 3 சீன நிறுவனங்களுக்கும், ஒரு பெலாரஸ் நாட்டு நிறுவனத்துக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அந்த 4 நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், வர்த்தக நிறுவனங்களை ஏவுகணை தொழில்நுட்ப திட்டத்துடன் தொடர்புபடுத்தி, தடை விதிப்பது கடந்த காலத்திலும் நடந்துள்ளதாக கூறியுள்ளது.
பல்லிகளை கண்டால் சிலர் அறுவெறுப்பு அடைவதும், அச்சப்படுவதும் உண்டு. ஆனால் வாஸ்து சாத்திரப்படி, பல்லி பூஜை அறை, வரவேற்பு அறையில் இருப்பது மங்களகரமானது. சில மாநிலங்களில் புதிய வீட்டின் கிரக பிரவேசத்தில் பல்லி சிலைகளை வைத்து வழிபடுவதும் உண்டு. ஜோதிட நம்பிக்கையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாகவும், லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய உள்ளது. எனினும், இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும். எனவே, பிற்பகல் நேரத்தில் முதியோர்கள், கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்கவும்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் பெங்குய்யில் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க போகோ ஆற்றில் படகில் 300 பேர் சென்று கொண்டிருந்தனர். அளவுக்கு அதிகமாக ஆள்கள் ஏற்றியதன் காரணமாக பழு தாங்க முடியாமல் படகு கவிழ்ந்தது. இதில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். எஞ்சியோரை தேடும் பணி நடைபெறுகிறது.
மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது. வார இறுதி என்பதாலும், இன்றும் (ஏப்.21) விடுமுறை என்பதாலும் நேற்றைய தினம் அதிகளவில் மதுப்பிரியர்கள் மதுவகைகளை வாங்கிச்சென்றனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பிரமாண்ட கோபுரத்துடன் அழகாக அமைந்துள்ளது பாபநாசநாதர் கோயில். 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோயில், நவகைலாச தலங்களில் ஒன்றாகும். இந்திரனின் பாவத்தை நீக்கியதால், இறைவன் பாபநாசநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள அம்மன் உலகம்மையாக வணங்கப்படுகிறார். தாமிரபரணியில் நீராடி, பாபநாசநாதரை வழிபட்டால் தீராத பாவமும் தீரும் என்பது ஐதீகம்.
ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் மெர்குர்க் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். எப்போதும் முதல் பந்தை சிக்சருடன் தொடங்கும் இவர், நேற்று முதல் 2 பந்துகளை டாட் வைத்தார். அது ஏன் என்பது பின்னர் தான் தெரிந்தது. 5 Four, 7 Six என விளாசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர், 18 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக, 3ஆவது ஓவரில் 4,4,6,4,6,6 என வாண வேடிக்கை காட்டினார்.
ஜப்பானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 7 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை. பசிபிக் கடலில் இரவு நேர பயிற்சியில் அந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது 25 நிமிட இடைவெளியில் விபத்துக்குள்ளாகின. ஹெலிகாப்டர்களில் இருந்த 7 வீரர்களும் கடலில் மூழ்கியதால், அவர்களை தேடும் பணி நடக்கிறது. ஏப்ரல் மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலியாகினர்.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 11 Four, 6 Six விளாசி 89(32) ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் முதல் 6 ஓவர்களிலேயே (பவர் பிளே) 125 ரன்களை குவித்தது ஐதராபாத் அணி. நடப்பு ஐபிஎல் தொடரில் 62, 19, 31, 21, 102, 89 ரன்கள் குவித்துள்ள அவர், அதிக ரன் குவித்தவர்களுக்கான வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதைபார்த்த நண்பர்கள் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.