India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரோக்கிய பானங்கள் என்ற பெயரில் விற்கப்படும் பானங்களில் சேர்க்கப்படும் அதிக சர்க்கரையால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை கலக்கப்பட்டிருந்ததால், ஆரோக்கிய பான பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதுபோல சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுவது குழந்தைகளுக்கு உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
▶ஜெய்ஸ்வால் (RR)- 13 பந்துகளில் vs KKR (2023) ▶கே.எல்.ராகுல் (PBKS)- 14 பந்துகளில் vs DC (2018) ▶பேட் கம்மின்ஸ் (KKR)- 14 பந்துகளில் vs MI (2022) ▶ஜேக் ஃப்ரேஸ் மெகர்க்- 15 பந்துகளில் vs DC (2024) ▶யூசுப் பதான் (KKR)- 15 பந்துகளில் vs SRH (2014) ▶நிகோலஸ் பூரண் (LSG)- 15 பந்துகளில் vs RCB (2023) ▶சுனில் நரைன் (KKR)- 15 பந்துகளில் vs RCB (2017) ▶சுரேஷ் ரெய்னா (CSK)- 16 பந்துகளில் vs PBKS (2014)
கேரள மாநிலத்தின் சாதனைகளை பொய்களால் மூடி மறைக்க முயல்கிறார் பிரதமர் மோடி என பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். கேரளாவின் ஊழல் பீகார் போன்றது என ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களை பிரதமர் மோடி இழிவுபடுத்தியுள்ளார். இங்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார் என்ற அவர், மோடியும், ராகுலும் கேரளாவை அவமதிப்பதில் ஓரே மாதிரியாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் திருமணக் குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ம.பியில் நடந்த திருமணத்தை முடித்துவிட்டு ராஜஸ்தான் துகர்கான் பகுதியைச் சேர்ந்த 10 பேர் ஒரே வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி இவர்கள் சென்ற வேன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 9 பேரும் உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
டெல்லிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய நடராஜன் 80 பவுன் தங்க சங்கிலியை கைப்பற்றினார். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஹைதராபாத் அணி சுழற்சி முறையில் இந்த செயினை வழங்கும். அந்த வகையில், நேற்றைய போட்டியில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுக்களை நடராஜன் வீழ்த்தினார். நடப்பு தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் 7ஆவது இடத்தில் அவர் உள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நான்கைந்து பேரால் சிறைபிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக ஆர்ஜேடி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தமது குடும்பத்தை பற்றி நிதிஷ் விமர்சித்திருப்பதாகவும், இது சரியில்லை என்றும் கூறினார். நிதிஷை நான்கைந்து பேர் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், அதுகுறித்து உரிய நேரத்தில் புத்தகம் எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
RCB – KKR அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 7 போட்டிகளில் 6இல் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, எஞ்சியிருக்கும் 7 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், பெங்களூரு அணி பிளே-ஆப் செல்லும் வாய்ப்பை தவறவிடும். இன்றைய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெறுமா? வெற்றிப் பாதைக்கு திரும்புமா?
தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை அடித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிலைகள் மீது காவி பெயிண்ட் அடித்தவர்கள், வானொலி என்ற தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமாக மாற்றியதாக சாடினார். தான் சொன்னதுபோலவே, அனைத்தையும் பாஜக காவிமயமாக்குவதாக கூறிய அவர், பாசிசத்துக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று கூறினார்.
மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், தேர்தல் நடந்து முடியும் வரையில், தமிழகத்தில் அனைத்து கட்சி அலுவலகங்களும் களை கட்டியிருந்தது. கட்சித் தலைவர்களின் வருகை, ஆலோசனை என அடிக்கடி கூட்டம் நடந்த வண்ணம் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்து 2 நாள்கள் ஆகி விட்டதால், அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சில தொண்டர்களே அங்குமிங்கும் தென்படுகின்றனர்.
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய நடத்தைக் கொள்கையை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யக்கோரி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். முதல்கட்ட வாக்குப்பதிவுக்கும், கடைசி கட்ட தேர்தலுக்கும் 50 நாள்கள் வேறுபாடு இருப்பதால், நடத்தை விதிகளை முதல்கட்ட தேர்தல் நடந்த இடங்களில் கடைபிடிப்பது வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலணை செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.