news

News April 21, 2024

பாஜகவின் பிரதமராகவே மோடி செயல்படுகிறார்

image

பாஜகவின் பிரதமராகவே மோடி செயல்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மோடியின் பேச்சுகள் இந்திய அரசிலமைப்புக்கு கட்டுப்பட்டு அனைவருக்குமானது போல தெரியவில்லை. பாஜகவின் கொள்கைகளை, கோட்பாடுகளை செயல்படுத்த விரும்பும் ஒரு நபரின் பேச்சாகவே அமைந்துள்ளது. அவர் இந்திய பிரதமர் என்ற நிலை மாறி பாஜகவின் பிரதமர் என்ற நிலையில் செயல்படுவதாக சரத்பவார் தெரிவித்தார்.

News April 21, 2024

BREAKING: வாக்குப்பதிவு சதவீதத்தில் மீண்டும் மாற்றம்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று இறுதியாக 69.46% வாக்குகள் பதிவானதாக கூறிய நிலையில், இன்று மீண்டும் வாக்குப்பதிவு சதவீதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 81.20%, கள்ளக்குறிச்சியில் 79.21% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News April 21, 2024

லீவு விட்டதும் ஓட்டு போடாமல் ஊருக்கு போயிட்டாங்க…

image

வாக்காளர் பட்டியலை முன்கூட்டியே தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அதுவும் வாக்குப்பதிவு குறைவுக்கு முக்கிய காரணம். ஆளும் அரசின் மீது எதிர்ப்பு இருந்தால் வாக்குப்பதிவு அதிகரிக்கும், ஆனால் திமுக அரசு மீது அதிருப்தி இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.

News April 21, 2024

Inverter ஏசி, சாதாரண ஏசி; இரண்டில் எது சிறந்தது..?

image

Split ஏசிக்களில் இன்வெர்ட்டர், சாதாரண ஏசி என 2 வகைகள் உள்ளன. இன்வெர்ட்டர் ஏசி அறையை குளிர்விக்க குறைந்த மின்சாரத்தை எடுத்து கொள்ளும். அறையின் வெப்பநிலையை கணக்கிட்டு, தானாகவே கம்ப்ரசரை கட்டுப்படுத்தும். இதனாலும் மின்சாரம் சிக்கனமாகும். சாதாரண ஏசிக்களில் இந்த வசதி கிடையாது என்பதால், இன்வெர்ட்டர் ஏசியே சிறந்தது. அதேநேரத்தில் இன்வெர்ட்டர் ஏசி பாகங்கள் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2024

3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும்

image

தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் ஏப்.25 வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது அசெளகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை?

image

தமிழக பாஜக தலைவர்களாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சி.பி ராதாகிருஷ்ணன், எல். கணேசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. இதுபோல மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் அல்லது ஆளுநர் பதவியில் ஏதேனும் ஒன்று அளிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

News April 21, 2024

13,000 அணுகுண்டுகளை வைத்துள்ள 9 நாடுகள்

image

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகள், 13,000 அணுகுண்டுகளை குவித்து வைத்திருப்பதாக அணுசக்தி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதிகபட்சமாக ரஷ்யாவிடம் 6,000, அமெரிக்காவிடம் 5,000 அணுகுண்டுகள் இருப்பதாகவும், அதற்கடுத்து சீனாவிடம் 410, பிரான்சிடம் 290, இந்தியாவிடம் 160, பாகிஸ்தானிடம் 170, இங்கிலாந்திடம் 120, வடகொரியாவிடம் 55, இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

News April 21, 2024

‘சூர்யா 44’ படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசை?

image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பீரியாடிக் ஆக்ஷன் கதைக் களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 21, 2024

சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னையில் இருந்து வாக்களிக்க வெளியூர் சென்றவர்கள் திரும்ப வசதியாக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னை – நெல்லை இடையே 2 நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இரவு 10.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் காலை 10.15க்கு சென்னை வந்தடைகிறது.

News April 21, 2024

பாஜக மீண்டும் வந்தால் அரசியலமைப்பு மாற்றப்படும்

image

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இடஒதுக்கீடே இருக்காது என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார். மீண்டும் ஒருமுறை பாஜக வென்றால் நாட்டில் பன்முக தன்மை சீர் குலையும். எதிர்க்கட்சிகளை சூறையாடிவிட்டு ஒற்றையாட்சி முறை அமல்படுத்தபடும். அந்த ஜனநாயக படுகொலையை தடுக்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று அவர் கோரினார்.

error: Content is protected !!