India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶அதிக ரன்கள் – விராட் கோலி (361) ▶அதிக விக்கெட்டுகள் – பும்ரா (13) ▶அதிக சிக்ஸர்கள் – ஹென்ரிக் க்ளாஸன் (26) ▶அதிக பவுண்டரிகள் – டிராவிஸ் ஹெட் (39) ▶அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் – விராட் கோலி (113(72)) ▶அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் – ரோமாரியோ ஷெப்பர்ட் (280.00) ▶சிறந்த எக்கனாமி – பும்ரா (5.96) ▶சிறந்த பந்துவீச்சு – பும்ரா (5/21) ▶அணியின் அதிகபட்ச ஸ்கோர் – ஹைதராபாத் (287/3) vs RCB
விவசாயிகள் மீது பாஜக, காங்கிரஸுக்கு அக்கறை இல்லை என்று மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்தவில்லை என்றும், பாஜகவும் அதுபோலவே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். முதலாளித்துவ, மதவாத, சாதிய கொள்கைகளை பின்பற்றும் பாஜகவால், ஏழைகள், தலித்துகளுக்கு பயன் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேற்குவங்கத்தில் வெயிலை தாங்க முடியாமல், பெண் செய்தி வாசிப்பாளர் மயங்கி சரிந்துள்ளார். தூர்தர்சன் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணி புரிபவர் லோபமுத்திர சின்ஹா. நேரலையில் செய்தி வாசித்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால் டிவியை பார்த்து கொண்டிருந்த மக்கள் திடுக்கிட்ட நிலையில், வெயிலால் தாகமெடுத்தபோது தண்ணீர் குடிக்க முடியாத காரணத்தால் மயங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்திலும் வெப்பம் தகிக்கிறது. பகல் நேரத்தில் கடும் வெயிலின் தாக்கத்துடன் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் மக்கள் சிரமத்தை சந்திக்கும் நிலையில், கடந்த சில நாள்களாக இரவிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. மின்விசிறியை பயன்படுத்தினாலும் புழுக்கம் நிலவுகிறது. இதனால் வீட்டில் ஏசி இல்லாதோர் தூங்க முடியாமல் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர்.
கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள RCB அணி, புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்தில் உள்ளது. அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெங்களூரு அணி, கொல்கத்தாவை அவர்களது மண்ணிலே வீழ்த்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான சி.யூ.இ.டி (CUET UG) தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, கணக்கியல், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட 63 தேர்வுகள், வரும் மே 15 முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 380 நகரங்களில் நடக்கும் இந்த தேர்வுக்கு, 7,17,000 ஆண்கள், 6,30,000 பெண்கள் என 13.48 லட்சம் விண்ணப்பித்துள்ளனர். <
ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ராஞ்சியில் I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ராகுலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் I.N.D.I.A. கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கு பாஜக தற்போதே காரணம் தேடி வருவதாக கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து வந்த பாஜகவினர், வாக்குப்பதிவு நாளில் வாக்காளர் பட்டியலில் குறை கூறுகிறார்கள். வெற்றி பெற சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர்கள், தோல்விக்கான காரணங்களை தேர்தல் முடிவுக்கு முன்பே கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வயிற்றில் 2 குழந்தைகளை சுமந்து கொண்டிருந்த மனைவியை, கணவன் எரித்துக் கொன்ற கொடூரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த சுக்தேவ் சிங்-பிங்கி தம்பதியினருக்கு, 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மனைவியை கட்டிலில் கட்டி வைத்து தீயிட்டு கொலை செய்துள்ளார் கணவன். புகாரின் போலீசார் அவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.