India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் I.N.D.I.A கூட்டணியில் இணைவார் என கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். I.N.D.I.A கூட்டணி வலுவாக உள்ளது. மம்தா பானர்ஜியைத் தவிர கூட்டணியில் உள்ள மற்ற அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தற்போது கூட்டணியில் இணையமாட்டேன் எனக் கூறியுள்ள மம்தா, விரைவில் எங்கள் கூட்டணியில் இணைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் விதிகளை மீறி தனியார் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தூர்தர்ஷன் இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதவாத கோட்பாட்டை மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து அரசுத் துறைகளில் திணித்து வருகிறது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்த பாஜக முயற்சிக்கிறது. அதற்காக, அரசுத் துறைகளின் மூலம் வேகமாக பரப்புரை செய்ய பாஜக துணிந்து விட்டதன் அடையாளமே இந்த காவி வண்ணம் என அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ‘கில்லி’ 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று ரீ ரிலீஸ் ஆனது. எவர் க்ரீன் படமான கில்லிக்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இப்படம் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.4 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்படும் ஒரு படத்தின் முதல் நாள் அதிகபட்ச வசூல் இதுவாகும். நீங்கள் இப்படத்தை பார்த்துவிட்டீர்களா?
I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய CAA சட்டம் ரத்து செய்யப்படும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. காங்., தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஆனால், CAA குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. இருப்பினும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்வோம் என உறுதியளித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் KKR – RCB அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் வெறும் 13 பந்துகளில் 48 ரன்கள் அடித்து KKR அணியின் தொடக்க வீரர் சால்ட் சாதனை படைத்திருக்கிறார். குறிப்பாக, லாக்கி ஃபெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 6 4 4 6 4 4 என 28 ரன்கள் குவித்தார் சால்ட். பின்னர், 14ஆவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தூர்தர்ஷன் சேனலின் புதிய லோகோ காவி நிறத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அது காவி இல்லை, ஆரஞ்சு நிறம் என்கிறார் தூர்தர்ஷனின் தலைமை நிர்வாக அதிகாரி கெளரவ் திவேதி. அழகுக்காக மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள அவர், பிரகாசமான நிறங்களை லோகோவில் பயன்படுத்துவது விளம்பர யுக்தி என்றார். மேலும், இதில் அரசியல் தொடர்பு இல்லை என விளக்கமளித்துள்ளார்.
தற்போது தங்கத்தின் தரத்தை மதிப்பிட பல்வேறு கருவிகள் உள்ளன. ஆனால், சோழர்கள் காலத்தில் தங்கத்தை கண்ணால் பார்த்தும், கைகளால் எடுத்துப் பார்த்தும் அதன் தரத்தைக் கூறும் திறனாளிகள் இருந்துள்ளனர். அது பற்றி உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சங்கரபாடியார்கள் என்பவர்கள் பொன்னின் தரத்தைச் சோதிக்கும் பணிகளை செய்து வந்ததாகக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் மாற்றி மாற்றி கூறுவதால் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதற்காக புதிய அப்ளிகேஷனை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. VOTER TURNOUT APP என்று பெயரிடப்பட்டிருக்கும் இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஃபோன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொகுதிவாரியான வாக்குப்பதிவை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
திருவள்ளூர் அருகே விசாரணைக் கைதி உயிரிழந்தததை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் காவல் மரணங்கள் அதிகரித்துள்ளதாக சாடினார். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு நடக்குமாறும், அதற்கான உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.