India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம் அதிக அளவில் பலன் பெறுவார்கள் என்று கூறியுள்ளார். குமாராசாமி மாண்டியா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
குஜராத்தின் பண்டாரோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 15 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாம்பின் படிமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாசுகி என பெயரிடப்பட்ட இந்த பாம்பு, 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 1,000 கிலோ எடை கொண்ட பாம்பு எனக் கூறப்படுகிறது. 1921ஆம் ஆண்டு ஒரு பச்சை அனகோண்டா உலகின் மிக நீளமான பாம்பு என்ற கின்னஸ் சாதனை பெற்றது. அதன் நீளம் 10 மீட்டர் அகும்.
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மக்களுக்கு ஆட்சி நடத்தாமல் மம்தா தனது கட்சியினர் பயன் அடையும் வகையில் நிர்வாகத்தை நடத்துகிறார். ஊழல்வாதிகள் மற்றும் குண்டர்களின் அரசாகவே இந்த ஆட்சி இருக்கிறது. திரிணாமுல் நிர்வாகிகளுக்கு மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக கூறிய அவர், தேர்தலுக்குப் பிறகு அனைத்தும் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த, ஷுப்மன் கில் சிறந்த தேர்வாக இருப்பார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ஷுப்மன் கில், நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 3(7) வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். முன்னணி வீரர்களுடன் போட்டிப் போட்டு வரும் அவருக்கு, இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வதே தனது நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரம் செய்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பத்தினர் ஜல் ஜீவன் திட்டத்தில் பயன் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். துரதிஷ்டவசமாக, ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு இதிலும் ஊழல் செய்தது. இல்லையெனில், இலக்கை எட்டியிருப்போம் என்றார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகக் கூறிய தேர்தல் ஆணையம், தற்போது 69.72 சதவீதம் மட்டுமே பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், கணக்கீட்டில் இவ்வளவு மாறுபாடு இருப்பதற்கான காரணம் என்னவென்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. உரிய விளக்கம் அளிக்குமா தேர்தல் ஆணையம்?
சிஎஸ்கே அணி விளையாடிய 7 போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்வி என எட்டு புள்ளிகள் பெற்று 0.52 என்ற ரன் ரேட் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி மேலும் 7 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகளில் கட்டாயம் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். சிஎஸ்கே சென்னையில் மேலும் 4 போட்டிகள் விளையாட உள்ளது அந்த அணிக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பின்மை நிலவியதாக யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் பிரசாரம் செய்த அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டில் பயங்கரவாதிகள் எங்கு வேண்டுமானாலும் ஊடுருவி வெடிகுண்டு வைப்பார்கள். ஆனால், தற்போது பட்டாசு வெடித்தால் கூட, தாங்கள் இதில் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் விளக்கமளிக்கிறது என்றார்.
முதல்வர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். கடலூரில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கோமதி என்ற பெண் திமுகவினரால் அடித்துக் கொல்லப் பட்டிருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
*முட்டையில் சிறிது வெண்ணெய்யை கலக்கி பிறகு ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும். *பச்சரிசியை வெந்நீரில் நனைத்து அப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக வரும். *குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். *வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது நேரம் வதக்கிவிட்டு, பிறகு எண்ணெய் ஊற்றி வதக்கினால் விரைவாக வதங்கிவிடும்.
Sorry, no posts matched your criteria.