news

News May 9, 2024

பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு அதிகரிப்பு

image

2020-21ஆம் ஆண்டில் ₹64,084 கோடியாக இருந்த பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 3 மடங்கு அதிகரித்து ₹1.79 லட்சம் கோடியாகவும், ₹1.07 லட்சம் கோடியாக இருந்த பங்குகள், கடன் பத்திரங்கள் மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 2 மடங்கு உயர்ந்து ₹2.06 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. அதேநேரம், குடும்பங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் ₹6.05 லட்சம் கோடியில் இருந்து ₹11.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

News May 9, 2024

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 9, 2024

நாய் கடித்தச் சிறுமிக்கு அறுவை சிகிச்சை நிறைவு

image

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், வரும் செவ்வாய்க்கிழமை அவரை டிஸ்சார்ஜ் செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர்.

News May 9, 2024

இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைந்தது

image

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 3 ஆண்டில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு குறைந்துள்ளதாக தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவித்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ₹23.29 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது. ஆனால், அதன்பின் அந்த சேமிப்புகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2021-22இல் ₹17.12 லட்சம் கோடியாக சரிந்த சேமிப்புகள், 2022-23ஆம் ஆண்டில் மேலும் சரிந்து ₹14.16 லட்சம் கோடியாக உள்ளது.

News May 9, 2024

பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை?

image

வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த அம்மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள் செய்வதைத் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

News May 9, 2024

மலர் டீச்சருக்கு பிறந்தநாள்

image

எந்த விதமான எதிர்பார்ப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே தனது கள்ளமற்ற சிரிப்பு, முகபாவனைகளால் ‘மலர் டீச்சராக’ ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இந்நிலையில், இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News May 9, 2024

மகனுடன் சுற்றுலாச் சென்ற அமைச்சர் உதயநிதி

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் ஓய்வெடுக்க சுற்றுலாச் சென்றுள்ளனர். அந்த வகையில், பல்வேறு தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மகன் இன்பநிதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் தனது X பக்கத்தில் வெளியிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

News May 9, 2024

இன்று கனமழை பெய்யும்

image

தமிழ்நாட்டில் இன்றும், மே 12ஆம் தேதியும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நெல்லை, தேனி, தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களிலும், மே 12ஆம் தேதி கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும், அடுத்த 5 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 9, 2024

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு நிறைவு

image

‘அன்னபூரணி’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ப்ளாக் ஷீப் யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தில், யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை நயன்தாரா படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.

News May 9, 2024

காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்

image

நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் பிரிப்பது கண்டிக்கத்தக்கது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சாம் பிட்ரோடாவின் இனவெறி கருத்துக்கு காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், 1947இல் நடந்த பிரிவினைக்கு காரணமான காங்., தற்போது மொழி, இனம், மதம் என மக்களை துண்டாட நினைப்பதாக விமர்சித்தார். மேலும், காங்கிரசின் மனநிலை ஆபத்தானது எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!