India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர்காலத்திற்கான புதிய பயணம் தேர்தலிலிருந்து தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாவீர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று பேசிய அவர், உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் ஆன்மிக குருக்களின் போதனைகள் தேவைப்படுவதாகக் கூறினார். யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரியத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. புதிய தலைமுறை இளைஞர்களும் நாட்டின் பாரம்பரியத்தை அடையாளமாகக் கருவதாகக் கூறினார்.
கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியிருப்பதால் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறுவதால் கோடைக்காலத்தில் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது அரசு. இந்த தடை ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அசைவப் பிரியர்கள் அதிக பேர் மீன் வாங்கக் குவிந்ததால் விலை இரட்டிப்பானது.
சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, கள்ளழகர் அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு மாலையில் புறப்பட்டார். நாளை அதிகாலை 5:30 மணியளவில் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் (ஏப். 23) அதிகாலை 5:51 – 6:10 வரை நடைபெறவுள்ளது. இதனால் மதுரை முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே, டெக் மகேந்திரா, HCL டெக்னாலஜி, மாருதி சுசூகி, இண்டசிண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகளை பொறுத்து அந்நிறுவன பங்குகளில் தாக்கம் இருக்கும்.
அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வாதிகாரத்திற்கு எதிராக I.N.D.I.A கூட்டணி போராடி வருவதாகத் தெரிவித்தார். சர்க்கரை நோயாளியான எனது கணவர் 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால், இன்சுலின் தராமல் அவரை கொல்லப் பார்க்கிறார்கள் என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த 1.7 கோடி பெண்களை இத்திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தேர்தல் முடிந்த பின்னர், இத்திட்டம் அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளித்தார். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலழிஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதே போல, ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக பருகலாம்.
மோசமான வானிலை காரணமாக அமித் ஷாவின் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 2அம் கட்டத் தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக டார்ஜிலிங் பகுதியில் அமித் ஷா பரப்புரை மேற்கொள்வதாக இருந்த நிலையில், அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
தற்போதைய சூழலில் நடுத்தர மக்கள் மாதத் தவணையில் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. பலர் EMI-இல் சிக்கி கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், EMI மூலம் பொருள்களை வாங்குவதாக இருந்தால் ‘40% EMI’ விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, உங்களது மொத்த சம்பளத்தில் மாத EMI 40%ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. RCB தரப்பில் சிறப்பாக ஆடிய ஜேக்ஸ் (55), படிதார் (52) அரை சதம் அடித்தனர். கடைசிவரை போராடிய கரண் ஷர்மா 25 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பெர்குசன் 2 ரன்கள் எடுக்க முயற்சித்து ரன் எடுத்து அவுட்டானார். இதையடுத்து KKR த்ரில் வெற்றிபெற்றது.
Sorry, no posts matched your criteria.