news

News April 22, 2024

மணிப்பூரில் 11 மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு

image

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குப்பதிவு மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூரில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பல்வேறு ஓட்டுப்பதிவு மையங்களில் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் கட்சி புகாரைத் தொடர்ந்து மறு வாக்குப்பதிவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

News April 22, 2024

இலவச கல்வி சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்

image

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இதன் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் வரும் மே 18ஆம் தேதி வரை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மே 27ஆம் தேதி தகுதியானவர் விவரம் அறிவிக்கப்படும்.

News April 22, 2024

சிறந்த காலை உணவுகள் அறிவோமா?

image

காலையில் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைக் எடுத்துக்கொள்வது அவசியம். வைட்டமின் சி சத்து வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனைத் தரக்கூடியது. உடைக்காத முழுத் தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

News April 22, 2024

சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6.30 மணி அளவில் நடைபெறுகிறது. மாசி வீதிகளில் தேரை வடம்பிடிக்கவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர் சேவை நடைபெறுகிறது.

News April 22, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஏப்ரல் – 22 | ▶ சித்திரை – 09 ▶கிழமை: திங்கள் | ▶திதி: சதுர்த்தசி ▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: காலை 07:30 – 09:00 வரை ▶எமகண்டம்: 10:30 – 12:00 வரை ▶குளிகை: 01:30 – 03:00 வரை ▶சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News April 22, 2024

நேரடி வரி வசூல் ₹19,58,000 கோடியை தாண்டியது

image

கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல், 18% அதிகரித்து ரூ.19 லட்சத்து 58 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில், இதன் மதிப்பீடு 19 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது. இதே போன்று, மறைமுக வரி வசூலும் ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இது மதிப்பீட்டை விட மிகவும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 22, 2024

மருத்துவ காப்பீட்டிற்கான வயது வரம்பு நீக்கம்

image

மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள இயலும். மூத்த குடிமக்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தவும் ஐ.ஆர்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.

News April 22, 2024

இந்து, ஜெய் பவானி வார்த்தையை நீக்க முடியாது

image

சிவசேனா கட்சியின் தேர்தல் பிரசார பாடலில் இருந்து ‘ஹிந்து’, ‘ஜெய் பவானி’ வார்த்தைகளை நீக்க முடியாதென தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார். உத்தவ் தாக்கரே கட்சிக்கு ‘தீப்பந்தம்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதனை விளம்பரத்தும் வகையில் சமீபத்தில் அக்கட்சி வெளியிட்ட பாடலில், ‘ஹிந்து’,‘ஜெய் பவானி’ வார்த்தைகள் இடம்பெற்றது. இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

News April 22, 2024

உலக பூமி தினம் இன்று!

image

பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பூமி மாசடைவதைத் தடுக்க உறுதி ஏற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்கள் வாழத் தகுதியான ஒரே இடமான பூமி, சுற்றுச்சூழல் பாதிப்பால், காற்று மாசடைந்து, தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது. 1970ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 175 நாடுகள் இந்த தினத்தை கடைப்பிடிக்கின்றன.

News April 22, 2024

தோனியின் கோபத்தை அப்போது தான் கண்டேன்

image

2014ஆம் ஆண்டு ஐபிஎல் குவாலிபையர் போட்டியில், சென்னை அணி தோல்வியடைந்த போது, தோனி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரசிகர்களால் ‘கேப்டன் கூல்’ என்றழைக்கப்படும் தோனி, அன்று டிரஸ்ஸிங் ரூமில் பேட் மற்றும் ஹெல்மெட்டை வீசி விட்டு, “ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் தோற்றுவிட்டோம்” என தோனி மனமுடைந்த கதறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!