India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட சோனியா காந்திக்கு போதிய தைரியமில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாத காரணத்தால் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்துக்கு சோனியா காந்தி வந்திருப்பதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அக்கட்சியினரே வாக்களிப்பதில்லை, அவர்களை நம்ப வேண்டுமா என்றும் மோடி விமர்சித்தார்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்தபோதிலும், 6 மாவட்டங்களில் மட்டும் குறைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே வாக்களித்துள்ளனர். இதற்கு கடும் வெயில் மற்றும் கோடை விடுமுறையை கழிக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணமே காரணமாக சொல்லப்படுகிறது.
இலவச திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் வலியுறுத்தியுள்ளார். நலிந்த நிலை மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலவசத் திட்டங்களைக் கொண்டு வருவதாகவும், அத்திட்டச் செலவினம் குறித்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் தெரிவித்தார். அத்துடன், இலவச அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறும் கூறினார்.
இளம் வயதிலேயே FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற தமிழக வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். கனடாவில் டொரோண்டாவில் நடைபெற்ற 14 சுற்றுகளின் முடிவில், 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரனை எதிர்த்து விளையாடுகிறார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்டத் தேர்தலில் 3 மாநிலங்களில் மட்டும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. மக்களவைக்கு 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிக்கிமில் 78.6% வாக்குப்பதிவாகி இருந்தது. அது தற்போது 79.9% ஆக அதிகரித்துள்ளது. மேகாலயாவில் 2019இல் 71.4% வாக்குப்பதிவாகி இருந்த நிலையில் தற்போது 76.6% ஆக உயர்ந்துள்ளது. சத்தீஸ்கரில் 2019இல் 66% வாக்குப்பதிவாகி இருந்த நிலையில், தற்போது 68.3%ஆக அதிகரித்துள்ளது.
முதல்கட்டத் தேர்தல் நடந்த 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 18இல் வாக்குப்பதிவு சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் அதிகபட்சமாக 25% குறைந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 7.7%, மத்திய பிரதேசத்தில் 7%, ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் 6% வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 2.5% வாக்குப்பதிவு சரிந்துள்ளது. கடும் வெயிலே வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் 422 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Ramp Driver, Handyman பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18 – 29. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 25. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹22,530 – ₹24,960/-. கூடுதல் தகவல்களுக்கு <
எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ, அந்த தொகுதிகளில் மீண்டும் அவர்களை சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்க கூடியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திமுகவினர் கடைசி நேரத்தில் நீக்கி உள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலை, எல்.முருகன் போட்டியிடும் தொகுதிகளில் தலா 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உ.பி.,யில் INDIA கூட்டணியின் வெற்றியை தடுக்கவும், வாக்குகளை சிதறடிக்கவும் கச்சிதமாக காய்களை நகர்த்திய மாயாவதி, பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மாறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள 64 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் 18 இஸ்லாமியர், 14 ஓபிசி, 10 பிராமணர் இடம்பெற்றுள்ளனர். INDIA கூட்டணி மிகவும் நம்பக் கூடிய தலித், ஓபிசி, இஸ்லாமிய வாக்குகளை அவர் பிரித்து விடுவாராம்.
எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான 2,018 கிரிமினல் வழக்குகளில் கடந்த ஒரே ஆண்டில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜன. 1 நிலவரப்படி 4,697 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில், 2,018 வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. எனினும் புதிதாக 1,746 வழக்குகள் பதிவானதால், நிலுவை வழக்குகள் 4,472ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பே விரைந்து தீர்ப்பளிக்க காரணமாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.