news

News May 10, 2024

வீடுகளில் மின்சார தணிக்கை

image

மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே அறிமுகம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் தணிக்கை செய்ய வேண்டும் எனவும், ஒருவரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 10, 2024

+1இல் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது?

image

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள், 11ஆம் வகுப்பு சேர விரும்புகின்றனர். ஆனால், எந்த பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் உயிரியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் உள்ளடக்கிய எந்த பிரிவையும் தேர்ந்தெடுக்கலாம். பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் முன் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.

News May 10, 2024

‘G.O.A.T’ தொலைக்காட்சி உரிமம் யாருக்கு?

image

விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ (Zee) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ரஷ்யாவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

News May 10, 2024

வட மாநிலத்தவர்கள் பணிக்கு திரும்பாததால் பாதிப்பு

image

தமிழ்நாட்டில் கட்டுமானம் தொடங்கி உணவகங்கள், கோழிப்பண்ணைகள் வரை வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இயங்கி வரும் ஜவுளி நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஓட்டு போட சொந்த ஊர்களுக்குச் சென்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாததால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

வெற்றி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்

image

12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்த அவர், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், விரைவில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News May 10, 2024

23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு

image

23 வகையான நாய் இனங்களை வளர்க்கத் தடை விதித்த உத்தரவை, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து, மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை விதிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்றத் தடை உத்தரவு உள்ளதால், தமிழக அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

News May 10, 2024

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் சாம் கரண்

image

நடப்பு IPL தொடரில் சாதகமான அறிகுறிகள் இருந்த போதிலும், எதிர்பாராத விதமாக இறுதிவரை செல்ல முடியவில்லை. ரசிகர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என PBKS கேப்டன் சாம் கரண் உருக்கமாக தெரிவித்தார். மேலும், ப்ளே ஆஃப்-க்கு முன்னேறாமல் போனது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஏற்ற, இறக்கங்கள் மிகவும் சவாலாக இருக்கும். ஆனால் நாம் அதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்றார்.

News May 10, 2024

‘பாகுபலி – 3’ படம் தயாராவது உறுதி

image

‘பாகுபலி’ படத்தின் 2 பாகங்களும் வசூல் வேட்டை நடத்திய நிலையில், இப்படத்தின் 3ஆம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த இயக்குநர் ராஜமௌலி, இப்படத்தின் 3ஆம் பாகம் கண்டிப்பாக வரும் என உறுதி அளித்துள்ளார். இப்படம் தன் மனதிற்கு நெருக்கமானது எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த பாகத்தை உருவாக்குவது குறித்து பிரபாஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாகத் தெரிவித்தார்.

News May 10, 2024

500க்கு 499 மார்க் எடுத்து மாணவி அசத்தல்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மனியா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி காவ்யா ஜனனி 500க்கு 499 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். 4 பாடங்களில் 100க்கு 100 மார்க் எடுத்த அவர், ஒரு பாடத்தில் மட்டும் 99 மார்க் எடுத்துள்ளார். ஏற்கெனவே, திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி அக்‌ஷ்யா பள்ளியைச் சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மார்க் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

20,000 பேர் கணிதத்தில் சதம்

image

நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 20,691 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், கணிதத்தில் 96.78% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு கணிதத்தில் 3,649 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதேபோல், 95.54% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட அதிகமாக 17,042 பேர் கணிதத்தில் சதம் பெற்றுள்ளனர்.

error: Content is protected !!