India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரோடு, சேலம், பெரம்பலூர், மதுரை, நீலகிரி, நாமக்கல்லில் இடியுடன் மிதமான மழையும், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், குமரி, தென்காசி, நெல்லையில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மழை காரணமாக சில இடங்களில் நீர் தேங்கும் அபாயம் உள்ளது.
2020ஆம் ஆண்டில், சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்குப் பின் சரிவைச் சந்தித்த சீனத் தயாரிப்பு செல்ஃபோன்களின் விற்பனை விகிதம் தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. Xiaomi, Oppo, Vivo, Realme, Transsion & Motorola போன்ற சீன நிறுவனங்களின் செல்ஃபோன்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு மார்ச்சில் 75%-ஐ தொட்டது. அதேபோல், ₹25,000 – ₹50,000 வரம்பில் உள்ள ஃபோன்களின் சந்தைப் பங்கு 18% ஆக அதிகரித்துள்ளது.
மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ் கூட்டணி, ₹12 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் முதல்வராக 23 ஆண்டு, பிரதமராக 10 ஆண்டு மோடி பதவி வகித்த காலத்தில் அவர் மீது எந்த ஊழல் புகாரும் எழவில்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார். கோடை காலம் வந்ததும் சிலர் ஓய்வெடுக்க வெளிநாடு செல்வதாகவும், ஆனால், மோடியோ 23 ஆண்டுகளில் தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்கவில்லை என்றார்.
பாலிவுட்டைப் பொறுத்தவரை ஒரு படம் ஹிட்டானால்தான் மறுபடியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஃபார்முலா இருப்பதாக நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ் ரசிகர்களிடம் தனக்கு வரவேற்பு கிடைத்ததாகவும், தனது படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், திறமையை பார்த்து நிறைய வாய்ப்புகள் வந்ததாகவும் தெரிவித்தார். பாலிவுட்டுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான் என்றார்.
அன்றாடம் சமையலுக்கு பயன்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை, உயர்ந்துகொண்டே வருவது இல்லத்தரசிகளை கலக்கமடையச் செய்துள்ளது. 10 நாட்களுக்குமுன், கிலோ ₹100-₹200 வரை விற்பனையான பூண்டு தற்போது ₹160-₹320ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும், வியாபாரிகள் பதுக்கி வைப்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், விலையை கட்டுக்குள் வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரிகளில் சேருவதற்கு முன் அவற்றின் தரம், அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். +2 முடித்த மாணவர்கள் BE படிக்க ஆர்வம் காட்டும் நிலையில், சமீபத்தில் வெளியான செமஸ்டர் தேர்வு முடிவில் 56 கல்லூரிகளில் 20% மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். போதிய வசதிகள் கல்லூரிகளில் இல்லாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
தோனிக்கு எதிராக விளையாடிய அனுபவம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ரஷீத் கான் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “தோனி ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் நுழையும்போதும், அவருக்கு வேறுவிதமான வரவேற்பும், அபாரமான அன்பும் கிடைக்கிறது. அவர் ஆடும் காலத்தில் நானும் கிரிக்கெட் ஆடுகிறேன். அவருக்கு எதிராகப் பந்துவீசுகிறேன் என்பதே பெருமையான விஷயம்தான்” என்றார்.
பிரதமர் மோடி சொல்வது அனைத்தும் பொய் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்காக மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதாகவும், அவை அனைத்தும் பொய் என்றும் கூறினார். ஊழலுக்கு எதிராக தனியாளாக போராடுவதாக மோடி கூறுகிறார், அனைத்து அதிகாரங்களும், உலகத் தலைவர்களின் ஆதரவும் இருக்கையில் எப்படி தனியாளாக போராடுவதாக கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களில் அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படும் என்று அசாம் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா ஷர்மா கூறியுள்ளார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை எப்படி முஸ்லிம்களுக்கு வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக இருக்கும் வரை இதை அனுமதிக்காது என்றும் கூறினார்.
சூர்யாவின் 44ஆவது படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள இப்படமானது, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக உள்ளது. இந்நிலையில், X பக்கத்தில் ரசிகர் ஒருவர் சந்தோஷ் நாராயணனிடம், “எப்போதும் போல சூர்யா 44இல், ஒரு டான்ஸ் மெட்டீரியலுக்கு பாட்டு வையுங்கள்” என்று கேட்க, அந்தப் பதிவை லைக் செய்து சூர்யா படத்திற்கு இசையமைப்பதை உறுதி செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.