India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரு நல்ல புத்தகம், நூறு நண்பர்களுக்கு சமம். நல்லொழுக்கத்தை கற்றுத் தருவதற்கும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் பல வழிகளில் புத்தகம் நமக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. அத்தகைய அறிவுசார் சொத்துக்கான புத்தகங்களை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. வாசிப்பை நேசிக்கும் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் குறித்து கமெண்டில் பகிரலாம்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் நகமுரா, காருனா, நெபோம்நியாச்சி ஆகியோரில் ஒருவரே வெற்றி பெறுவர் என நார்வே செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சென் கணித்திருந்தார். ஆனால் தனது கணிப்பைத் தகர்த்த குகேஷ்க்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ‘குகேஷ் இளம் வீரர்களில் பெரியளவில் பிரபலம் இல்லை. இதனால் அவரைப் பற்றி மதிப்பிடும் போது குழப்பமே மிஞ்சும். ஆனால் தான் மிகவும் வலிமையானவர் என்பதை நிரூபித்து விட்டார்’ என்றார்.
உ.பி.,யில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98.50 சதவீத மதிப்பெண்கள் பெற்று சீதாப்பூரைச் சேர்ந்த பிராச்சி நிகம் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். படிப்பில் சாதித்த மாணவியை பாராட்டாமல், சிலர் அவருக்கு அரும்பு மீசை இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளனர். இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக, புறத்தோற்றத்தை வைத்து கிண்டலடித்தவர்களை எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
▶ஏப்ரல் – 23 | ▶ சித்திரை – 10 ▶கிழமை: செவ்வாய் | ▶திதி: பெளர்ணமி ▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: அதிகாலை 01:30 – 02:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: 03:00 – 04:30 வரை ▶எமகண்டம்: காலை 09:00 – 10:30 வரை ▶குளிகை: மதியம் 12:00 – 01:30 வரை ▶சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
தைவானில் 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நேற்று மாலை தொடங்கி இரவு வரை கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவானது. இதனால் தைபேயில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரம் வெளியாகவில்லை. அங்கு ஏப்.3இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர்.
ஒபெக் கூட்டமைப்பு, வரும் ஜூலை முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரிக்க இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையில், 2025க்குள் 10 மில்லியன் பேரல்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அடுத்தாண்டு சவுதியின் பொருளாதார வளர்ச்சி 5.5% முதல் 6% ஆக இருக்குமென ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள் நடைபெறுகிறது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். காலை 7.25 மணிக்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றி ராம ராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்படுகிறார்.
பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்தது போன்று கடம்பூர் ஹோட்டலிலும் குண்டுகள் வெடிக்குமென ஜாலஹள்ளி காவல்நிலையத்திற்கு தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மோப்ப நாய்,வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஹோட்டல் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஏன் முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், ‘தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? என தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை வினவியுள்ளார்.
சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு சித்ரா பெளர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, நாளை (புதன்) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செய்ய இயலாதவர்கள், அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
Sorry, no posts matched your criteria.