India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால், நாடு கருப்பு நாள்களை காணும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜக ஊழல்வாதிகளை கட்சிக்குள் நுழைய அனுமதித்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகள் இந்தியாவை பற்றி பேசும் போது , மோடி பாகிஸ்தானை பற்றியே நினைப்பதாக விமர்சித்தார். பாஜகவுக்கு பரப்புரை செய்ய எதுவும் இல்லாததால், வடக்கில் ராமரை முன்னிறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சோம்பு வயிற்று வலி, குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது. இருமல், தொண்டை புண், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகளை குணமாக்கவும் பயன்படுகிறது. இதில், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் சோம்பு உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் கனவு நிறைவேறாது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஒரு தேசிய கட்சியின் தலைவரை சிறையில் வைக்க முடியாது என்று கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றமே ஜாமின் வழங்கியதாக தெரிவித்த அவர், பாஜகவால் வெற்றி என்ற கரையை இந்த முறை கடக்க முடியாது என்றார். தேர்தலில் பாஜக தோற்று வனவாசத்திற்கு செல்லும் என்றும் சூளுரைத்தார்.
மே – 13 | சித்திரை – 30
கிழமை: திங்கள்
நல்ல நேரம்: 06:30AM -07:30AM, 4:30PM – 5:30PM
கெளரி நேரம்: 09:30 AM – 10:30 AM, 07:30 PM – 08:30 PM
ராகு காலம்: 07:30 AM – 09:00 AM
எமகண்டம்: 10:30 AM – 12:30 PM
குளிகை: 01:30 PM – 03:30 PM
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
திதி : ஷஷ்டி
சென்னை அணிக்கு எதிரான தோல்வி, தங்களுக்கு மிகச்சிறந்த பாடம் என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை கணித்து, அதற்கேற்ப தங்களால் விளையாட முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். நடப்பு தொடரில் சிறப்பான விளையாடி வந்த ராஜஸ்தான் அணி, கடந்த 3 போட்டிகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 2ஆவது இடத்தில் உள்ளது.
தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. நம் உடல் எடை 60% தண்ணீரால் ஆனது. நாம் சரியாக செயல்பட தண்ணீர் அவசியம். தண்ணீர் குறைவாக குடிப்பது பல ஆபத்துகளை ஏற்படுத்தும். தண்ணீர் குறைவாக குடிப்பதால் முதலில் நீரிழப்பு ஏற்படும். தலைவலி, சோர்வு, வறண்ட வாய், தாகம், சிறுநீர் குறைதல் போன்றவை நீரிழப்பின் அறிகுறிகள். மேலும், மலம் கடினமாகி மலச்சிக்கல் ஏற்படும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிராக, சிஎஸ்கே பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பவர் ப்ளேயில் 55 ரன்களை எடுத்ததால், விரைவாக வெற்றி பெறுவோம் என்று நினைத்ததாக கூறிய அவர், சில விக்கெட்டுகள் வேகமாக விழுந்ததால், ராஜஸ்தானுக்கு சிறிய வாய்ப்பை கொடுத்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார். நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் 142 ரன்கள் எடுத்த நிலையில், அதனை சிஎஸ்கே போராடி வென்றது.
➤ ஒருவனை அகந்தை ஆட்கொண்டால், அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும். ➤ மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட, ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல். ➤ நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான். ➤ வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே. ➤கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
வெற்றிலையில் உள்ள ‘அர்கோலைன்’ என்ற வேதிப்பொருள் வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயில் புற்றுநோயை ஏற்படுத்தும். வெற்றிலை போடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும். பற்களை கறைப்படுத்தும், ஈறுகளை பாதிக்கும், வாயில் புண்கள் ஏற்படுத்தும், பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் மிக அதிகம்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் கேமரூன் கிரீன் ஆட்ட நாயகனாக தேர்வானார். பெங்களூரு 187 ரன்கள் அடித்த நிலையில், டெல்லி 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பெங்களூரு அணிக்கு அதிகரித்துள்ளது. கொல்கத்தா அணி ஏற்கெனவே பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.