news

News April 26, 2024

சினிமா பெரிய விஷயமில்லை

image

வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயமில்லை என நடிகர் ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், தியேட்டரில் படங்களைப் பார்த்து விட்டு அங்கேயே படம் பற்றிய கருத்தைப் பேசுங்கள் எனக் கூறியுள்ளார். வீட்டுக்குள் உட்கார்ந்து நடிகர்கள் குறித்துப் பேச வேண்டியமில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறையக் கடமைகள் இருப்பதாக அறிவுறுத்தியுள்ளார்.

News April 26, 2024

2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது

image

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவுபெற்றது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News April 26, 2024

மணிப்பூரில் வெடித்தது வன்முறை

image

புறநகர் மணிப்பூர் தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. முதல்கட்ட தேர்தலில் வன்முறை நிகழ்ந்ததால், 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, உக்ருல் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 26, 2024

விராட் கோலியின் ஆமை வேக ஆட்டம்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆமை வேக பேட்டிங் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. நேற்றைய போட்டியில் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். சக வீரரான பட்டிதார் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதனை விமர்சித்திருக்கும் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இப்படியான சாதாரண ஆட்டத்தை கோலியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். உங்களது கருத்து என்ன?

News April 26, 2024

விராட் கோலியின் ஆமை வேக ஆட்டம்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆமை வேக பேட்டிங் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. நேற்றைய போட்டியில் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். சக வீரரான பட்டிதார் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதனை விமர்சித்திருக்கும் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இப்படியான சாதாரண ஆட்டத்தை கோலியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். உங்களது கருத்து என்ன?

News April 26, 2024

ஏப்ரல் 30, மே 1, 2ஆம் தேதிகளில் மழை பெய்யும்

image

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 2இல் லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 26, 2024

ஏப்ரல் 30, மே 1, 2ஆம் தேதிகளில் மழை பெய்யும்

image

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 2இல் லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 26, 2024

சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

image

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி இன்று 150 புள்ளிகளை இழந்து 22,419 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 609 புள்ளிகளை இழந்து 73,730 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

News April 26, 2024

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்து பிடுங்கப்படும்

image

விவசாயிகளிடம் வாரிசு வரியை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி முயல்வதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை பாதி பிடுங்கிவிடுவார்கள் என்றும் அவர் பிஹார் பரப்புரையில் தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜஸ்தானில் இதே மாதிரியான சர்ச்சை கருத்துக்களை அவர் தெரிவித்ததால் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

News April 26, 2024

மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படிக் விநியோகிப்பீர் என மத்திய அரசிடம் ஐகோர்ட் வினவியுள்ளது. தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது. அப்போது, அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என வினவிய கோர்ட், அது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

error: Content is protected !!