India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261/6 ரன்கள் குவித்தது. 262 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு, பேர்ஸ்டோ (108*) – சஷாங்க் சிங் (72*) ஜோடியின் அதிரடி ஆட்டத்தால், 18.3 ஓவரில் 262/2 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
✦குடற்புண்களைக் குணமாக்க உதவுகிறது. ✦வறட்டு இருமலுக்கு அதிமதுரத்துடன் இலவங்கப்பட்டைச் சேர்த்துப் பொடியாக்கி சிறிது சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ✦சுவாசக்கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. ✦தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. ✦தலைபாரம் இருக்கும் போது இதை நீர்விட்டு அரைத்து பற்றுப்போட விரைவில் பாரம் இறங்கும். நாள்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக இலவங்கப்பட்டை உள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வீரர் பேர்ஸ்டோ அதிரடி சதம் விளாசினார். முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 261/6 ரன்கள் குவித்தது. 262 என்ற கடின இலக்கை துரத்தும் பஞ்சாப் அணிக்கு, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பேர்ஸ்டோ 8 சிக்சர், 8 பவுண்டரிகளுடன், 45 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தற்போது பஞ்சாப் அணி 16.1 ஓவரில் 210/2 ரன்கள் எடுத்துள்ளது.
‘ஜப்பான்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், நல்ல வசூலைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கை நேத்ரா குமணன் 2ஆவது முறையாக இந்தியா சார்பில் களம் காண்பது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப் போட்டிக்குத் தேர்வான முதல் பெண்மணியான அவர், மகுடம் சூட வாழ்த்தியுள்ளார்.
ரிஷப் பந்த், அக்சர் பட்டேல் இருவரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். 8ஆவது இடத்தில் களம் இறங்கி 15 முதல் 20 ரன்களை அடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரோகித் சர்மா, அக்சர் பட்டேலுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற அவர், ரிஷப் பந்த் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வீரராக இருப்பார் என்றார்.
கும்ப ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடையும் சனி பகவான், நவ.15 வரை அதே நிலையில் பயணிக்கிறார். இதனால் ரிஷபம், கன்னி, துலாம், மகர ராசியினர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலைத் தவிர்க்கலாம். பிறருக்கு ஜாமின் வழங்குவது சிக்கலை உருவாக்கும். முதலீடுகள், தொழில் தொடங்குவது சறுக்கலை உருவாக்கும். உரிய பரிகாரம் செய்தால் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இரவு உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது.
உலகிலேயே தோனி தான் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் பாலாஜி தெரிவித்துள்ளார். தோனியின் அதிரடி முன்பு யாரும் நெருங்க முடியாது என்ற அவர், இந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் அளவுக்கு ஸ்ட்ரைக் ரேட் யாரிடமும் இல்லை என்றும் தெரிவித்தார். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள தோனி 260 ஸ்ட்ரைக் ரேட்டில் 91 ரன்கள் எடுத்துள்ளார். 8 ஃபோர் மற்றும் 8 சிக்ஸ் அடித்துள்ளார்.
2ஆம் கட்ட தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளிக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். “2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஏமாற்றமளிக்கப் போகிறது. அரசின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்களும், பெண்களும் வலுவான ஆதரவை தந்துள்ளனர்” என X-இல் அவர் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.