India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிளே ஆஃப் வாய்ப்பை மும்பை அணி இழந்ததற்கு ஹர்திக்கின் கேப்டன்சிதான் காரணம் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கௌதம் கம்பீர், “வில்லியர்ஸ் கேப்டனாக இருக்கும்போது சாதித்தது என்ன? அவரது கேப்டன்சி வரலாற்றை எடுத்து பாருங்கள், மற்றவர்களின் கேப்டன்சியைவிட மிகவும் மோசமானதாக இருக்கும்” எனக் காட்டமாக கூறினார்.
சுதா கொங்காரா, சூர்யா கூட்டணியில் ‘புறநானூறு’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும், இப்படம் தொடங்க தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நடிகர் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் 14 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளது உள்துறை அமைச்சகம். குடியுரிமை வேண்டி விண்ணப்பித்து, இந்தியாவில் அகதிகளாக வசித்துக் கொண்டிருக்கும் 14 பேருக்கு உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கினார். CAA சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது முதன்முறையாக CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக 2020இல் ராணா கபூர், தீரஜ் வதாவனை ED கைது செய்தது. தொடர்ந்து, 2022இல் சிபிஐ தீரஜை கைது செய்ய, அவர் சிறையிலேயே சொகுசாக வாழ்வதாகவும், உடல்நிலையை காரணம் காட்டி நாள் கணக்கில் மருத்துவமனையிலேயே தங்கி இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவரை, உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் கைது செய்ய சிபிஐ அனுமதி பெற்றது.
அதற்கு கைமாறாக யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ₹40 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ₹600 கோடி DHFL கடன் வழங்கியுள்ளது. அதேபோல், யெஸ் வங்கியிலிருந்து BRPL நிறுவனத்தின் பெயரில் ₹1,700 கோடி கடன் பெறும் திட்டத்தையும் DHFL முன்வைத்திருந்தது. இப்படி, போலி நிறுவனங்களின் பெயரிலும், தரமற்ற சொத்துக்களை அடமானம் வைத்தும் பல கோடி மோசடிகளை DHFL அரங்கேற்றி வந்தது சிபிஐ, ED விசாரணையில் தெரியவந்தது.
மும்பையை சேர்ந்த தீரஜ், கபில் வதாவன் சகோதரர்கள் DHFL நிதி நிறுவன இயக்குநர்களாக இருந்தபோது, 17 வங்கிகளில் ₹34,000 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 2019ல் எழுந்த இப்புகார் குறித்து சிபிஐ, ED நீண்ட விசாரணை நடத்தியது. அதில், 2018ஆம் ஆண்டில் DHFL-ன் குறுகிய காலக் கடன் பத்திரங்களில் யெஸ் பேங்க் ₹3,700 கோடி முதலீடு செய்ததன் மூலம் இம்மோசடி வடிவம் பெறத் தொடங்கியது தெரியவந்தது.
தேனி, தென்காசி. விருதுநகர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரித்துள்ள மாவட்ட நிர்வாகம் கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதால் நடந்து செல்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை பிரதமர் வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஹமிர்பூரில் பிரசாரம் செய்த அவர், மோடி ஆட்சியில் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகக் கூறினார். மேலும், பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக காங்., மிரட்டுவதாக கூறிய அவர், நம்மிடம் இருக்கும் அணுகுண்டுகள் ஃபிரிட்ஜில் வைத்திருப்பதற்காகவா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தோல்வி உறுதியானதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்களிக்க விரும்பாமல், தேர்தலைப் புறக்கணித்ததால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது. காந்திநகரின் களநிலவரங்களை பாஜகவினரிடம் கேட்டறிந்தபோது, பல சந்தேகங்கள் நீங்கின. NDA கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்” என்றார்.
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குஜராத், உ.பி, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், தமிழகத்தில்தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியது. அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, போதைப் பொருளைத் தடுக்க காவல்துறைக்கு உரிய பயிற்சி வழங்க பரிந்துரைத்தது.
Sorry, no posts matched your criteria.