India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீன உளவுக் கப்பல் 2 மாதங்களுக்கு பிறகு மாலத்தீவுக்கு மீண்டும் வந்துள்ளது. மாலத்தீவு அதிபராக மொய்சூ பதவியேற்ற பிறகு, அந்நாடு இந்தியாவின் போட்டி நாடான சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மாலத்தீவுக்கு பிப்ரவரி மாதம் சீனாவின் சியாங் யாங் ஹாங் 3 என்ற கப்பல் வந்து ஒரு வாரம் முகாமிட்டிருந்தது. பிறகு திரும்பிச் சென்ற அக்கப்பல், 25ஆம் தேதி மீண்டும் வந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க, டாஸ்மாக் கடைகளை குறைப்பது மட்டுமல்லாமல், நேரத்தையும் குறைப்பது தான் “ஒரே தீர்வு” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ₹38,000 கோடி கேட்கப்பட்ட நிலையில், ₹276 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என விமர்சித்தார். தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் பார்க்கும் மத்திய அரசு, யானை பசிக்கு சோளப்பொரிபோல நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நிதி பகிர்வு சீராக இல்லை எனவும் சாடினார்.
மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கர்நாடகாவை விட ரூ.3000 கோடிக்கு மேல் மத்திய அரசு குறைத்து வழங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய இபிஎஸ், தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியைவிட குறைந்த அளவு நிதியையே அளிக்கும் எனக் குற்றம் சாட்டிய அவர், திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை என விமர்சித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக காங்கிரஸ் கூட்டணி நிறுத்தவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவில் இருந்து மூத்த தலைவர் ஆரிஃப் கான் விலகியுள்ளார். மேலும் கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்லாமியர்களின் வாக்குகள் வேண்டும், ஆனால் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த மாட்டீர்களா என மக்கள் கேட்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான BMW , ஐ-5 எலக்ட்ரிக் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 205 கிலோவாட் சார்ஜர் மூலம் காரின் பேட்டரியை அரை மணி நேரத்திற்குள் 80% சார்ஜ் செய்துவிட முடியுமாம். 3.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 516 கிமீ பயணிக்க முடியும். இதில் 360 டிகிரி கேமரா & டச் ஸ்கிரீன் டிஸ்பிளே உள்ளது. இதன் விலை ரூ.1.20 கோடியாகும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு மே 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், வேதியியல், கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். கூடுதல் தகவல்களுக்கு <
கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலை தொகுதியில் 78.3% வாக்குகள் பதிவாகியுள்ளன. காங்., எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் அத்தொகுதியில், மாவோயிஸ்டுகள், தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என பொதுமக்களை மிரட்டிச் சென்றனர். இதையடுத்து, பதற்றமான அந்த வாக்குச்சாவடியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்பகுதி மக்கள் அச்சமின்றி வாக்குகளை செலுத்தினர்.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 அதிகரித்து, ₹54,160க்கும், கிராமுக்கு ₹15 அதிகரித்து ₹6,770க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹87.50க்கும், கிலோவிற்கு ₹87,500க்கும் விற்பனையாகிறது.
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவுத் தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் நோட்டீஸ் அளிக்கப்பட்டு பதில் கோரப்பட்டுள்ளது. மேலும் ஒரு புகார் மீது விசாரணை நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.