India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே காய்கறி, பழங்களின் விலை விண்ணை முட்டும் சூழலில், மளிகைப் பொருட்களும் விலை உயர்வது வேதனையளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
KKR அணிக்கு எதிரான 42ஆவது லீக் ஆட்டத்தில் 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து PBKS அணி வென்றது. அந்தப் போட்டியில், சஷாங்க் சிங் 68 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் சஷாங்க் குறித்துப் பேசிய முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன், “SRH அணியில் இருந்தபோது சிறந்த வீரரான அவரைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. பாராட்டைப் பெற தகுதியான சிறப்பாக விளையாடினாய் நண்பா” எனக் கூறினார்.
2023ஆம் ஆண்டில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 34,500 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் வர்த்தகம் & மேம்பாட்டுக்கான பிரிவு (UNCTAD) தெரிவித்துள்ளது. UNCTAD வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்திய சேவைகள் ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகள் முக்கிய பங்களிப்பு வழங்கின. உலக சராசரியைவிட (8.9%) இந்தியாவின் வளர்ச்சி (11.4%) உயர்வாகப் பதிவாகியுள்ளது.
கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில், நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, “Rehydration Points” மையங்களை அமைக்கவும், ஜூன் 30ஆம் தேதி வரை 89 லட்சம் ORS பாக்கெட்டுகளை மக்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் எடையைக் குறைக்க நடைப் பயிற்சியைக் காட்டிலும், சைக்கிள் பயிற்சி நல்ல ரிசல்ட் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மன அழுத்தம், மனச்சோர்வு பிரச்னை இருப்பவர்களுக்கு இப்பயிற்சி பயன் தரும். எலும்புகள், தசைகள் வலிமை பெறவும், இதய நோய், புற்றுநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் உதவும்.
தமிழக மக்கள் மீது மோடி கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதற்கு மத்திய அரசு ரூ.275 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். கர்நாடகாவுக்கு ரூ.3454 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் இன்னும் மீதம் இருப்பதால் நாங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். KKR-க்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி அவர், 68 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பாஜகவும், மத்திய அரசும் அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்தித் தன்னை கைது செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையின் பிரமாணப் பத்திரம் தொடர்பாக நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த பதில் மனுவில், ED குற்றச்சாட்டுக்கள் போலியானவை, அடிப்படை ஆதாரம் இல்லாதவை எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்குச் சாதகமாக தான் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
வறட்சி பாதித்த 22 மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளால் குடிநீர் வழங்கலில் சுணக்கம் ஏற்படக் கூடாது எனக் கூறியுள்ள அவர், கூட்டுக் குடிநீர்த் திட்ட, நீரேற்ற நிலையங்களுக்குச் சீரான மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கோடைகாலம் முடியும் வரை லாரிகள் மூலம் மக்களுக்குக் குடிநீர் வழங்க அவர் ஆணையிட்டுள்ளார்.
நிலையற்ற வாழ்க்கையில் மருத்துவக் காப்பீடும், ஆயுள் காப்பீடும் தேவை எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பலர் ஆயுள் காப்பீடு எடுக்க முன் வந்தாலும் காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்வதில் சந்தேகம் இருக்கிறது. இதற்கு, ’20X காப்பீடு’ விதியைப் பயன்படுத்தலாம். அதாவது, ஆண்டு வருமானத்தின் 20 மடங்குக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.