news

News November 2, 2025

SIR-ஐ கண்டு திமுக ஏன் அஞ்சுகிறது? TTV தினகரன்

image

SIR-ல் என்ன தவறு நடந்து விடப்போகிறது என திமுக அஞ்சுகிறது என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, எப்படி தில்லுமுல்லு செய்ய முடியும் எனவும், கொடநாடு விவகாரத்தில் EPS-ஐ திண்டுக்கல் சீனிவாசன் கோர்த்துவிடப் பார்க்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொடநாடு விவகாரத்தில் <<18173992>>EPS அக்யூஸ்ட்<<>> என்றால் ஜெயிலில் போட வேண்டியதுதானே என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார்.

News November 2, 2025

BREAKING: வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

image

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருத்தம் மேற்கொள்ளும் அவகாசம் அக்.31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது, நவ.7(வெள்ளிக்கிழமை) வரை திருத்தம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பயன்படுத்திக்கோங்க மாணவர்களே!

News November 2, 2025

Cinema Roundup: ரஜினியின் புது பட அப்டேட்

image

*கவுதம் கார்த்திக் நடித்து வந்த ‘ரூட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. *‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார், மீண்டும் படம் இயக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். *ரஜினியின் அடுத்த படம் பற்றிய அப்டேட், கமல் பிறந்தநாளான வரும் 7-ம் தேதி வெளியாகும் என தகவல். *‘பாட்ஷா’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, அடுத்ததாக சத்ய சாய் பாபா பற்றி ‘அனந்தா’ என்ற பக்தி படத்தை இயக்குகிறார்.

News November 2, 2025

4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

image

ஜோதிட கணிப்பின்படி, செவ்வாய் – புதன் சேர்க்கை நிகழ்ந்திருப்பதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *கடகம்: நிதி நிலை உறுதியாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். *விருச்சிகம்: தொழிலில் முன்னேற்றம். எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். *மகரம்: நிதி சார்ந்த பலன்கள் அதிகரிக்கும். வருமானம் உயர வாய்ப்பு. *மீனம்: வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். சவால்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

News November 2, 2025

₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

image

₹2,000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ₹5,817 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு இன்னும் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டு இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT

News November 2, 2025

அசுரவேகத்தில் முடி வளர மூலிகை எண்ணெய்!

image

➤உரலில் சடாமாஞ்சில் வேர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இடித்து கொள்ளவும் ➤கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் விட்டு, அரைத்த பொடியை போட்டு, பிரிங்கராஜ் தூளை சேர்க்கவும் ➤20 நிமிடங்கள் வறுத்து, எண்ணெய்யை வடிகட்டி கிளாஸ் பாட்டிலில் ஊற்றுங்கள் ➤வாரத்திற்கு 2 முறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, மசாஜ் செய்துவர முடி உதிர்வு குறையும். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.

News November 2, 2025

இனிமேல் இங்கு சிகரெட் புடிக்க முடியாது!

image

தங்களது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ, மாலத்தீவு அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 2007 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள், புகையிலை பொருள்களை வாங்கவோ பயன்படுத்தவோ அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை இல்லா சமுதாயம் ஒன்றை படைக்கும் வகையில், எடுக்கப்பட்ட இம்முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் இது சாத்தியம் ஆகுமா?

News November 2, 2025

BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

அமமுக இளைஞர் பாசறையின் மாநில இணைச் செயலாளர் D. ஆண்டனிராஜ் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். தென் சென்னையை சேர்ந்த அவர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின்போது டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். அவருக்கு அமமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் EPS தலைமையில் ஆண்டனிராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்றார்.

News November 2, 2025

நீல ரத்தம் கொண்ட உயிரினங்கள்

image

ரத்தம் என்றால் சிவப்பு நிறம் என்றுதானே நமக்கு தெரியும்? ஆனால், இயற்கையாகவே நீல ரத்தம் கொண்ட சில உயிரினங்கள் உள்ளன. ஹீமோசயனின் என்ற மூலக்கூறின் காரணமாக, அவற்றின் ரத்தம் நீல நிறமாக இருக்கும். நீல ரத்தம் கொண்ட விலங்குகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல் உங்களுக்கு தெரிந்த விலங்கின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.

News November 2, 2025

IT ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆனால் ஒரு கண்டிஷன்

image

தற்போதைய பணிநீக்கத்திற்கு பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டு புதிதாக ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் AI-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 6,000 பேரை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாஃப்ட், அடுத்ததாக 9,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!