India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் கீழ்தான் இந்திய அணி 2011 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை வென்றது. மேலும், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில், இன்று முதல் மே 1 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 1ஆம் தேதி வழக்கத்தை விடக் கூடுதலாக அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளது.
ராகுல் தொடர்பாக சர்ச்சைக் கருத்து தெரிவித்த கேரள சிபிஎம் எம்எல்ஏ அன்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காந்தியின் பெயரை ராகுல் பயன்படுத்தக்கூடாது என்ற அன்வர், ராகுலின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், மின்சார வாகனங்களின் 2ஆவது பெரிய சந்தையாக விளங்கும் சீனாவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் அவர் 2ஆவது முறையாக சீனா சென்றுள்ளார். பன்னாட்டு வணிகத்துக்கான சீன கவுன்சிலின் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடும் பணிச் சுமையால் அவர் இந்திய பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டுகொண்டால் அதிலிருந்து எளிதாக விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் மிகவும் குறைதல், சாப்பிட தொடங்கியதுமே வயிறு நிரம்பிய உணர்வு ஆகியவை புற்றுநோயின் பரவலான அறிகுறிகளாகும்.
காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகே, பெங்களூருவில் குண்டு வெடித்ததாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பிரசாரம் செய்த அவர், குண்டு வெடித்ததை சிலிண்டர் வெடித்ததாக காங்கிரஸ் அரசு கூறியதாகத் தெரிவித்தார். தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்காகக் கண்ணீர் வடிப்பதுதான் காங்கிரசின் சாதனை என விமர்சித்த அவர், டெல்லியில் இப்படியொரு சம்பவம் நடந்தபோதும் காங்கிரஸ் கண்ணீர் வடித்ததாகக் கூறினார்.
இந்திய அணியின் தேர்வாளராக நான் இருந்தால் சஞ்சு சாம்சனை முதலில் தேர்வு செய்வேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சில வாரங்களில் டி20 உலக்கோப்பையில் விளையாடச் செல்லும் இந்திய அணியின் விமானத்தில் சஞ்சு சாம்சன் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பரப்புரைப் பாடலை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து பாடல் எழுதியிருப்பது நீதித்துறையை அவமதிப்பது போல இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரேவிடமும் தேர்தல் ஆணையம் இதே போன்று பாடலை மாற்ற உத்தரவிட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்தார்.
தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த பொதுமக்களுக்கு மாவட்டம் தோறும் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ORS பாக்கெட் வழங்கப்படும் இடங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால், தேவையில்லாத அலைச்சலை குறைக்கும் வகையில், ரேஷன் கடைகள் மூலமாக ORS பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு ப்ளஸி பவுலிங் தேர்வுசெய்துள்ளார். இதையடுத்து GT இன்னும் சற்றுநேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. புள்ளிப் பட்டியலில் GT 7ஆவது இடத்திலும், RCB கடைசி இடத்திலும் உள்ளது. RCB வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Sorry, no posts matched your criteria.