India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்லாமியர்கள் குறித்துப் பிரதமர் மோடி பேசியது தொடர்பாகப் பிரேமலதா கருத்துத் தெரிவித்துள்ளார். பிரதமரின் பேச்சை தேசமே உற்றுநோக்கும் நிலையில், ஏன் இது மாதிரியான கருத்தை பேசுகிறார் என்பதை மோடி விளக்க வேண்டும் என்ற அவர், இந்தியாவில் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்று தெரிவித்தார். மோடியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக முறை 500க்கும் அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னருடன், கோலியும் இணைந்துள்ளார். இருவரும் தலா 7 முறை 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளனர். அதைப் போல ஷிகர் தவானும், கே.எல் ராகுலும் தலா 5 முறை 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளனர். குஜராத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலி, 44 பந்துகளில் 70 ரன்களை அடித்து பெங்களூர் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது. இதனால் தான் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு குறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியசைத் தாண்டிப் பதிவாகியுள்ளது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கரூர் (பரமத்தி), தருமபுரி, திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. வரும் நாட்களில் வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராமர் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணித்த ராகுல் காந்தி, இந்துக்களை வெறுக்கிறார் என எல்.முருகன் சாடியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுக்காலக் கனவு நிறைவேறியுள்ளது என்றார். மேலும், அந்தக் கோவிலுக்கு ஒருமுறை கூடச் சென்று வழிபாடு நடத்தாத ராகுல் காந்தி ராமரையும், இந்துக்களையும் வெறுக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது என விமர்சித்துள்ளார்.
கானா நாட்டைச் சேர்ந்த அபுபக்கர் என்ற இளைஞர், மரங்களைக் கட்டிப்பிடிப்பதில் புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். அலபாமாவில் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களைக் கட்டிப்பிடித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஒரு மரத்தை ஒருமுறை தான் கட்டிப்பிடிக்க வேண்டும், அப்போது மரத்திற்கும், அபுபக்கருக்கும் சேதம் எதுவும் ஏற்படக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்றுநேரத்தில் CSK பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் 5 வெற்றிகளுடன் SRH 3ஆவது இடத்திலும், 4 வெற்றிகளுடன் CSK 6ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் டாடா கெமிக்கல்ஸ், அல்ட்ரா டெக் சிமென்ட், பெடரல் வங்கி, இந்தியன் ஆயில், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், அதானி பவர், அம்புஜா சிமென்ட், கோல் இந்தியா, புளூ ஸ்டார், சவுத் இந்தியன் வங்கி, டாபர் இந்தியா, டைட்டன், எம்ஆர்எஃப், கோடக் பேங்க், ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 201 ரன்கள் இலக்கைத் துரத்தி ஆடிய RCB அணியில் தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளஸி 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் கூட்டணி சேர்ந்த ஜாக்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். கோலி 70*, ஜாக்ஸ் 100* அதிரடியால் RCB அணி 16 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியடைந்தது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரவு 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துவருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.