India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கொடுத்த திட்டங்களை விட, அதிக திட்டங்களை பிரதமா் மோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளாா் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த அவர், நிதியை பொருத்தவரை மாநில பேரிடா் நிவாரணத்தை கணக்கிட்டு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு நிதியும், நீதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு படத்தில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இசை எவ்வளவு பெரிதோ அதேயளவு மொழியும் பெரிது என்றும், பாட்டுக்கு பெயர் வைப்பது மொழி தான். ஆனால், அதற்கு அழகு சேர்ப்பது இசை என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், இசையும், மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
▶ஏப்ரல் – 29, சித்திரை – 16 ▶கிழமை – திங்கள்
▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM
▶குளிகை நேரம்: 1:30 PM – 3:00 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶திதி: சஷ்டி
▶நட்சத்திரம்: 4:42 AM வரை பூராடம் பிறகு உத்திராடம்
சிறுநீரகங்கள் சரிவர இயங்க, ஒருவா் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீா் அருந்துவது அவசியம். அதுவே கோடை காலத்தில் அந்த அளவு 60 மி.லி. ஆக தேவைப்படும். 60 கிலோ எடை கொண்ட ஒருவா், கோடை காலத்தில் 3.6 – 4 லிட்டா் வரை தண்ணீா் குடித்தே ஆக வேண்டும். அப்போது தான் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய முடியும். தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், 10 Four, 3 Six என விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தனது 17ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்த அவர், 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம், ஹைதராபாத்துக்கு அணிக்கு தக்க பதிலடி கொடுத்தது சென்னை அணி.
அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும், உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை தனது சாதனையாக பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், 2004இல் 12ஆவது இடம், 2014இல் 7ஆவது இடம், 2024இல் 5ஆவது இடம் என இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் எந்த மாய மந்திரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
✍கூட்டத்தில் நிற்பது எளிதானது. ஆனால், தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
✍பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதுபோல முதலில் நீ இரு.
✍நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள்.
✍சிக்கனம் தான் பெரிய வருமானமாகும்.
✍ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்
✍மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே.
நடிகர் சமுத்திரக்கனி அரை மணிநேரம் கூட வீணடிக்க மாட்டார் என இயக்குநர் பாலா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவருக்கு இருக்கும் மனது பெரியது என்றும், அவர் படங்களை எப்போதும் ஊக்குவித்துக் கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற குணம் அவரிடம் தொடர்ந்து இருந்தால், இன்னும் 1,000 பேர் பிழைப்பார்கள் என பாராட்டியுள்ளார்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுவரை 81,212 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 41,690 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி புதிய சாதனை படைத்துள்ளது. வில் ஜாக்ஸ் 100*(41) & விராட் கோலியின் 70*(44) அதிரடியான ஆட்டத்தால், 201 ரன்கள் என்ற இலக்கை 16 ஓவர்களிலேயே எட்டி RCB அணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இதுவே RCB அணியின் அதிவேக 200+ ரன் சேஸ் ஆகும். மேலும், ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை (19 சதங்கள்) பதிவு செய்த அணி என்ற பெருமையையும் பெங்களூரு அணி பெற்றது.
Sorry, no posts matched your criteria.