news

News April 29, 2024

நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி

image

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நிதியுதவி வழங்கிய நெப்போலியனுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டிடப் பணிகளை முடிக்க ரூ.40 கோடி தேவைப்படுவதாக நடிகர் சங்கம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அமைச்சர் உதயநிதி, கமல், விஜய் ஆகியோர் தலா ரூ.1 கோடியும், சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சமும் ஏற்கெனவே நிதியுதவி அளித்திருந்தனர்.

News April 29, 2024

2 மாநிலத்தில் அமைந்துள்ள வினோத ரயில் நிலையம்

image

நவாபூரில் உள்ள இந்த ரயில் நிலையம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. 2 மாநிலத்திலும் ஒரு பாதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை வேறுபடுத்துவது என்னவெனில், டிக்கெட் கவுண்டர் அலுவலகம் மகாராஷ்டிராவிலும், அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் குஜராத்திலும் அமைந்துள்ளது. இங்கு, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் அறிவிப்பு செய்யப்படுகிறது.

News April 29, 2024

சி.ஏ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்!

image

தேர்தல் நேரத்தில் சி.ஏ தேர்வுகளை நடத்தி, மாணவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கக் கூடாது என்று மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “4,46,000க்கும் மேற்பட்ட சி.ஏ., மாணவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை நிலை நாட்டுவதில் உறுதியாக உள்ளனர். எனவே, கல்வி & ஜனநாயக நலன்களை சமநிலைப்படுத்த மே 2ஆம் தேதி தொடங்கும் சி.ஏ. தேர்வுகளைத் ஒத்திவைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

News April 29, 2024

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

image

தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த பின், மதம், மொழி, இனம் அடிப்படையில் யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்பது பி.ஆர் சட்ட விதியாகும். அதனை மீறியதால்தான், 1999இல் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே 6 ஆண்டுகள் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இப்போது பாஜகவினர் முஸ்லீம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களைப் பேசிவரும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

News April 29, 2024

பிரதமருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், ஜோன்டலின் கோரிக்கையை நிராகரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News April 29, 2024

மின் பற்றாக்குறையை தமிழ்நாடு சந்திப்பது ஏன்?

image

நமது மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும், அதன் நீண்டகால வளர்ச்சியை அரசு கணிக்கத் தவறுவதே மின் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. மின் நிலையம் ஒன்றை உருவாக்க 3 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தைத் தொடுகிறது. குறைந்தபட்சம், 5 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடாவிட்டால், மின் தேவையை ஈடுசெய்ய முடியாது.

News April 29, 2024

எனது குரலைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்

image

சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை வைத்திருப்பவர்களில் தான் முதலிடத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பாகல்கோட்டில் பிரசாரம் செய்த அவர், தான் சமூக வலைதளங்களை நேர்மறையாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் தோற்றவர்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது குரலைப் போலியாக உருவாக்கித் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

News April 29, 2024

மனைவி ராதிகா குறித்து நெகிழ்ந்த சரத்குமார்

image

ராதிகா முதலில் தனது நண்பர், பிறகுதான் மனைவி என சரத்குமார் தெரிவித்துள்ளார். மனைவி குறித்து சமீபத்தில் பேசிய அவர், தன்னுடைய குடும்பத்தைப் புரிந்து கொண்டு ராதிகா வாழ்க்கை நடத்துவதாகக் கூறினார். குறிப்பாகத், தனது முதல் மனைவியையும், அவருக்குப் பிறந்த குழந்தைகளையும் அரவணைத்துச் செல்வதாகவும், தனது முதல் மனைவியை அவர் வரலட்சுமியின் தாய் என்றோ, வேற்று ஆளாகவோ பார்த்தது இல்லை எனத் தெரிவித்தார்.

News April 29, 2024

சற்றுநேரத்தில் தண்டனை விவரம்

image

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரம் சற்றுநேரத்தில் வெளியாகிறது. இவ்வழக்கில், நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இருவரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News April 29, 2024

தலைநகரை கொலைநகராக மாற்றி விடாதீர்கள் : தினகரன்

image

சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக டிடிவி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையை சுயநலத்துக்கு பயன்படுத்தாமல், தமிழக முதல்வர் அதனை பொதுநலத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அவர், அப்போது தான் தலைநகராக இருக்கும் சென்னை, கொலை நகராக மாறாமல் இருக்கும் என்றார். சென்னையில் கடந்த சில நாள்களாக, அடுத்தடுத்து கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!