news

News April 29, 2024

சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்!

image

ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின் உக்கிரம் தாங்காமல் மயங்கி விழுந்த 14 வயது மூத்த மகன் அர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 29, 2024

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்

image

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை, இ-பாஸ் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட கோர்ட், இது தொடர்பாக இந்திய அளவில் விளம்பர செய்ய உத்தரவிட்டது.

News April 29, 2024

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அரசை விமர்சித்த அன்புமணி

image

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு அமைதி காப்பதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதைத் தடுக்க தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, ஆன் லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

News April 29, 2024

கிணற்றில் மூழ்கி தாயும் குழந்தைகளும் பலி

image

வேலூரில் நீச்சல் பழகியபோது 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் ரித்திக் (9) மற்றும் நித்திகாவிற்கு (7) நீச்சல் பழக்க தாய் பவித்ரா (30) அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு, எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடலைக் கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

அரசுப் பள்ளிகளில் 3,27,940 மாணவர்கள் சேர்க்கை

image

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவ, மாணவியரைச் சேர்க்கப் பள்ளிக்கல்வித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, மார்ச் 1 அன்று சென்னையில் மாணவர்கள் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

News April 29, 2024

நேர்மைத் தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட்!

image

பொதுநல வழக்கில் நேர்மைத் தன்மையை நிரூபித்தால் மட்டுமே ரூ.3.5 லட்சம் டெபாசிட்டை மனுதாரருக்கு திருப்பித் தர முடியுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான தனது வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், டெபாசிட்டைத் திருப்பித் தரக் கோரிக்கை விடுத்தார். இதற்கு, வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கவில்லையென உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.

News April 29, 2024

மருத்துவத் தேவைகளைத் தயாராக வைத்திருங்கள்

image

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், சுகாதாரத்துறை களப் பணியாளர்கள் நாள்தோறும் பகல் 11 மணிக்குள் தடுப்பூசி போடும் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், அதிக வெயிலில் மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ORS கரைசலை வைத்திருக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ்களில் ஐஸ் பேக்குகள் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

News April 29, 2024

அரசாளச் சொன்னால் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்

image

கர்நாடக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்யாமல் வசூல் செய்யும் வேலைகளில் ஈடுபடுவதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் காங்கிரஸ் கஜானாவைக் காலி செய்துவிட்டதாகக் கூறிய அவர், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் போகும் நாள் மிக விரைவில் வரும் என்றார். கர்நாடகத்தில் 14 தொகுதிகளுக்குத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7இல் தேர்தல் நடைபெறுகிறது.

News April 29, 2024

சிசிடிவி கோளாறு குறித்து திமுக புகார் மனு

image

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா செயல்படாதது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. திமுக எம்.பி இளங்கோ அளித்த மனுவில், வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி ட்ரோன் கேமராக்களை இயக்க அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 173 சிசிடிவி கேமராக்களும், ஈரோட்டில் ஒரு சிசிடிவி கேமராவும் திடீர் கோளாறால் பழுதானது. பின்னர் உடனடியாகச் சரி செய்யப்பட்டது.

News April 29, 2024

உலகக்கோப்பை டி20 அணியில் சஞ்சு சாம்சன்?

image

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 77 சராசரி, 161 ஸ்டிரைக் ரேட்டுடன் 385 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 4 அரைசதமும் அடங்கும். மேலும், இந்திய அணியின் முதல் 4 இடங்களில் விளையாட ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார் ஆகியோர் தேர்வாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!