news

News April 29, 2024

தமிழகத்தில் ₹1,309.52 கோடி பறிமுதல்

image

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை, ₹1,309.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதில், ₹179.91 கோடி பணமும், ₹1,083.78 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ₹8.65 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ₹1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ₹35.8 கோடி மதிப்புள்ள இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News April 29, 2024

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1 முதல் விடுமுறை

image

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசரக் கால வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட், ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகளின் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

News April 29, 2024

உலகக் கோப்பைக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு?

image

T20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி, நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர்கள் கொண்ட இந்த குழுவில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஜூன் 2ஆம் தேதி அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெறும் இத்தொடருக்கான குழுக்களை, மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் வெளியிட வேண்டும். எனவே, இன்று நியூசிலாந்து அணி தங்கள் 15 பேர் கொண்ட குழுவை அறிவித்தது.

News April 29, 2024

காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த விடமாட்டேன்

image

மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரஸ் கட்சின் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், உங்களின் உரிமை மற்றும் இட ஒதுக்கீட்டை காக்க தான் எந்த உச்சத்திற்கும் செல்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

News April 29, 2024

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்

image

கோவிஷீல்டு தடுப்பூசி சில நேரங்களில் ரத்தம் உறைதல் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துமென அஸ்ட்ராஜெனெகா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கி கோவிஷீல்டு தடுப்பூசியை விநியோகித்தன. கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அஸ்ட்ராஜெனெகா இதனைத் தெரிவித்தது.

News April 29, 2024

Fact Check : ஓட்டுப் போடப் போலி விரல்கள்.. உண்மை என்ன?

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில், மோசடியாகப் போலி விரல்கள் பயன்படுத்தப்படுவதாக ‘ஓட்டுப் போடுவதற்கு போலி விரல்கள்’ என தலைப்பில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. ஆனால், இது உண்மையல்ல. 2013ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், ஜப்பானைச் சேர்ந்த யாகுசா என்ற குழுவின் முன்னாள் உறுப்பினர்கள், தங்களது கைவிரல் ஊனத்தை மறைக்க, செயற்கையாக விரலைப் பயன்படுத்துவதை குறிக்கிறது.

News April 29, 2024

கொல்கத்தா அணிக்கு 154 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்த DC அணி முதலில் அதிரடி காட்டினாலும், பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்களில் 153/9 ரன்களை எடுத்தது. அதிகப்பட்சமாக குல்தீப் 34, பந்த் 27 ரன்கள் எடுத்தனர். KKR தரப்பில் வருண் 3 விக்கெட்டும், ராணா, அரோரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

News April 29, 2024

மதுரை, புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு

image

மதுரை, புதுக்கோட்டையில் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் மதுரை, புதுக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 29, 2024

தேர்தல் வரும்போதெல்லாம் பாஜக இதைச் செய்கிறது

image

மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2 கட்டத் தேர்தலிலும் பாஜகவின் தோல்வி உறுதியான நிலையில், மீதமுள்ள 5 கட்டத் தேர்தலிலும் பாஜக தோல்வி அடையும் என்றார். தேர்தல் வரும்போதெல்லாம் பாஜகவினர் விசயத்தைப் பயன்படுத்துவர் எனக் கூறிய அவர், இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகப் பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

News April 29, 2024

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த முறையை ஒழித்து, இயந்திரங்களை பயன்படுத்துமாறு தமிழக அரசுக்கு யோசனைக் கூறிய கோர்ட், பாதாள சாக்கடையில் இறங்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டை 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தவும், சுத்தம் செய்யும் போது பலியாவோரின் குடும்பத்திற்கு கருணை வேலை வழங்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!