India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹54,160க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ₹6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹92.50க்கும், ஒரு கிலோ ₹92,500க்கும் விற்பனையாகிறது.
டி20 கிரிக்கெட்டுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை, ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில், பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (861) முதலிடத்திலும், ஜெய்ஸ்வால் (714) 6ஆவது இடத்திலும் உள்ளனர். பவுலிங் தரவரிசையில், அக்சர் படேல் (660) 4ஆவது இடத்திலும், ரவி பிஷ்னோய் (659) 5ஆவது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டருக்கான தரவரிசையில், ஹர்திக் பாண்டியா (185) 7ஆவது இடத்தில் உள்ளார்.
‘G.O.A.T’ படத்தின் 50% டப்பிங் நிறைவடைந்ததாகவும், ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதமுள்ள டப்பிங் பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், VFX பணிகளை புகழ்பெற்ற லோலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இந்நிறுவனம் ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அதிமுக படுதோல்வி அடைந்தால் தலைமை நெருக்கடியைச் சந்திக்கும் எனவும் கூறுகின்றனர்.
ஜப்பானின் தோஷிபா நிறுவனம் ஊழியர்களில் 4,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 6% ஆகும். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த அந்நிறுவனம், நிர்வாக சிக்கல் மற்றும் முறைகேடுகளால் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், தலைமையிடத்தை டோக்கியோவில் இருந்து கவாசாகிக்கு மாற்ற திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், உள்ளூர் பணியாட்களை குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாள்கள், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் காப்பீட்டு விற்பனைத் தளங்களில் 10இல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு, வீட்டுக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகுமுறையோடு விற்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, சில வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடன், டெபாசிட்டுகளைப் பெற அணுகும்போது காப்பீட்டுகளைத் திணிப்பதாகத் தெரிகிறது.
▶ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’, ▶சேத்துமான் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ஜார்ஜ் மரியன் நடித்துள்ள ‘எலக்சன்’, ▶செல்வம் மாதப்பன் இயக்கத்தில் பிரஜன், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ‘படிக்காத பக்கங்கள்’ ஆகிய 3 திரைப்படங்களும் இன்று (மே 17) திரையரங்குகளில் வெளியாகின்றன.
இந்த ஐபிஎல் சீசன் நாங்கள் நினைத்தது போல் முடியவில்லை என்றாலும், நிறைய பாடங்களும் நீங்காத நினைவுகளும் கிடைத்துள்ளன என்று GT கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். SRH-க்கு எதிரான நேற்றைய கடைசி போட்டி ரத்தானது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், 3 வருடங்கள் இந்த அழகான குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், தங்களை ஆதரித்து அன்பைக் காட்டிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் சென்னை வீட்டுக்கு அமைச்சரின் பரிந்துரையில் இலவசமாக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தற்போது, சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
Sorry, no posts matched your criteria.