India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% நீர் இருப்பு உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் சூழலில், 7 டிஎம்சி குடிநீர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் அக்கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் அவர் நீக்கப்பட உள்ளார்.
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறை, கடன் பெற்றவர்களிடம் வட்டி, பிற கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய RBI உத்தரவிட்டுள்ளது. கடன் பெற்றவர்களிடம் நியாமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை அவர்களுக்கே திருப்பி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது. இவ்வழக்கில், நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா தேவி தரப்பில் இன்றும் வாதாட அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
முன்னணி கார் டாக்ஸி நிறுவனமான ஓலா கேப்ஸ், அதன் 10% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 200 பேர் வேலை இழப்பார்கள் எனத் தெரிகிறது. இது குறித்து விளக்கமளித்த அந்நிறுவனம், திறனை மேம்படுத்த மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தேவையற்ற பணிகளை நீக்கி, புதிய பணிகளை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை & விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் இயற்கை எரிவாயு பஸ்களை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில், அனைத்து போக்குவரத்துக் கழகத்திலும் பஸ்கள் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்வதால், காற்று மாசு & செலவினத்தைக் குறைக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கோவை சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல மாதமாக மூடியிருந்த அந்த ஆலையில், பராமரிப்புப் பணி மேற்கொண்டு வந்தபோது, சிலிண்டர் வெடித்து அமோனியா கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாயு கசிவால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக, 3,000 ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2022 வரை பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் பென் டிரைவில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த பென் டிரைவை தடயவியல் ஆய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவகவுடா குடும்பத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தாம்பத்ய உறவை மேம்படுத்தும் கணக்கற்ற மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழையை பச்சைத்தங்கம் என்று ஆயுர்வேதம் போற்றுகிறது. கற்றாழையில் டீ எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். கற்றாழையை சுத்தம் செய்து, அதன் நுங்கை 7 முறை நீரில் அலசி, வேகவைத்து உலர்த்திப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் கற்றாழைப் பொடியை நீரில் 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.