news

News April 30, 2024

போலி வீடியோக்களை உருவாக்குவதில் பாஜக கில்லாடி

image

போலி வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதில் பாஜகவினர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தனது குரலைப் போலியாக உருவாக்கி அவதூறு பரப்புவதாகக் குற்றம்சாட்டிய பிரதமருக்கு பதில் அளித்த அவர், அவதூறு பேச்சுக்களை பேசுவது மோடியின் வாடிக்கை என்றார். தேர்தல் நேரத்திலாவது அவர் வெறுப்பு பேச்சுக்களை பேசாமல் இருக்க வேண்டும் என பதிலடி கொடுத்தார்.

News April 30, 2024

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாளாகும். புதிய விதிகளின் படி ஒரு நிதியாண்டில், முதல் அரையாண்டு நிதியை ஏப்ரல் 30, இரண்டாவது அரையாண்டு நிதியை அக்டோபர் 30க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, இன்றைக்குள் வரியை செலுத்தினால் அதிகபட்சமாக ₹5,000 தள்ளுபடி வழங்கப்படும். தாமதமாக வரி செலுத்தினால் மாதம் 1% தனி வட்டி விதிக்கப்படும்.

News April 30, 2024

அணை உடைந்த விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

image

கென்யாவில் உள்ள மிகப்பழமையான கிஜாப் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல், கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், பலர் மாயமாகியுள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

News April 30, 2024

திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது

image

சங்கம்விடுதி நீர்த்தேக்கத் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட சம்பவத்தை திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தொட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியுள்ளதென கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய முருகன், ST/SC மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News April 30, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து, ₹54,000க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,750க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹87க்கும், ஒரு கிலோ ₹87,000க்கும் விற்பனையாகிறது.

News April 30, 2024

கோவை தேர்தல் முடிவை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

image

கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

News April 30, 2024

அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி

image

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவியபோது அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். கொடிய நோயிலிருந்து அது நம்மைக் காக்கும் என்று மக்கள் நம்பினர். ஆனால், அதன்பின் ஏற்பட்ட மர்ம மரணங்கள், தடுப்பூசியின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பின. அந்த சந்தேகங்களை உறுதி செய்யும் விதமாக AstraZeneca நிறுவனம், தடுப்பூசியினால் பக்க விளைவுகள் வரும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

News April 30, 2024

சென்னையில் வந்தே மெட்ரோ ரயில் சேவை

image

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய இரு வழித்தடங்களில் வந்தே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. வந்தே மெட்ரோ ரயிலானது, குறுகிய கால அவகாசத்தில் அதிக ரயில் நிறுத்தங்களில் நிறுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

என் திருமணத்தை பார்க்க ஏன் இந்த அவசரம்?

image

நடிகை மாளவிகா மோகனன் தனது X பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, கவர்ச்சி உடையில் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, கிளாமர் பிடிக்கும் என்பதால் அந்த மாதிரியான உடை அணிவதாகத் தெரிவித்தார். திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு, அதைப் பார்க்க ஏன் இவ்வளவு அவசரம் என அவர் கேள்வி எழுப்பினார். 30 வயதான அவர், தமிழ், தெலுங்கு உள்பட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

News April 30, 2024

மரங்களை அகற்றுவது தேவைதானா?

image

பசுமைச் சூழ்ந்த கோவையின் அடையாளங்களில் ஒன்றான பொள்ளாச்சி – ஆனைமலை சாலை மிகவும் பிரபலமானது. இந்நிலையில், சாலை விரிவாக்கத்துக்காக அங்குள்ள மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணிகளால் கோவையில் வெயில் 2-3 டிகிரி அதிகரித்துள்ள சூழலில், மரங்களை அகற்றுவது தேவைதானா? என சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

error: Content is protected !!