news

News April 30, 2024

ஃபகத் பாசிலை புகழ்ந்த நயன்தாரா

image

ஜித்து மாதவன் இயக்கத்தில், ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தைப் பார்த்த நடிகை நயன்தாரா, ஃபகத் பாசிலைப் பாராட்டியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், சூப்பர் ஸ்டார் ஃபகத் பாசில் எனப் புகழ்ந்துள்ளார். வெறித்தனமாக நடித்திருப்பதாகக் குறிப்பிட்டுப், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

நரேனும் வருணும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்களா?

image

சுனில் நரேனும் நானும் அதிகமாகப் பேசிக்கொள்ள மாட்டோம் என்று KKR அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். நான் சரியாகப் பந்து வீசவில்லை என்றாலோ எனக்கு ஏதேனும் ஒரு பிரச்னை என்றாலோ சுனில் உடனே வந்து எனக்குத் துணை நிற்பார் என்று கூறிய வருண், ஆறுதல் சொல்லித் தேற்றுவார் என்றார். ஷாருக்கானும், அபிஷேக் நாயரும் அளித்த ஆதரவை ஒருபோதும் மறக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.

News April 30, 2024

இந்து, முஸ்லிம் அமைதியை சீர்குலைக்க முயற்சி

image

இந்து, முஸ்லிம் மக்களிடையேயான அமைதியை சீர்குலைக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் முயற்சிப்பதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மாதேபுராவில் பிரசாரம் செய்த அவர், இந்து, முஸ்லிம் இடையேயான அமைதியை சீர்குலைக்க நினைத்தபோது, கூட்டணியை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார். ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

குறைந்தபட்சத் தண்டனை வழங்கக்கூடாது

image

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்குக் குறைந்தபட்சத் தண்டனை வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என அவர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்திற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

News April 30, 2024

டி20 WC: இந்திய அணி அறிவிப்பு

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியில் 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட் (கீப்பர்), சஞ்சு சாம்சன், பாண்டியா (துணை கேப்டன்), துபே, ஜடேஜா, சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News April 30, 2024

ஓய்வின்றி இரவு பகலாக உழைக்கிறேன்

image

நாட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இரவு பகலாகத் தாம் பணியாற்றுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டு மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரத் தாம் விரும்புவதாகவும், ஆனால் எதிர்க்கட்சியினரோ தம்மை மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் விமர்சித்தார்.

News April 30, 2024

‘கில்லி’யை கொண்டாடுபவர்கள் இதை ஏன் செய்யவில்லை?

image

20 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘கில்லி’ படம் வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில், கில்லி படத்தை கொண்டாடும் ரசிகர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கில்லி பட நடிகர் தாமு. கில்லி படத்தை கொண்டாடும் நீங்கள், 20 ஆண்டுகளாக மரம் நட்டுச் சமூக சேவை செய்வோரை எப்போதாவது கொண்டாடியுள்ளீர்களா? என விரக்தியாகக் கூறியுள்ளார். தாமு பல ஆண்டுகளாக மரம் நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

ஹர்திக் பாண்டியாவை முந்தும் ரிஷப் பண்ட்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 2ஆம் தேதி அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடக்கவுள்ள இத்தொடரில், துணை கேப்டன் பொறுப்புக்கு ஹர்திக் பாண்டியாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அவரை விட சிறப்பாக செயல்பட்டுவரும் ரிஷப், அந்த ரேஸில் தற்போது முன்னிலையில் உள்ளார்.

News April 30, 2024

தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழவேந்தன்

image

இலங்கை முன்னாள் எம்.பி ஈழவேந்தன் (91) வயது மூப்பால் கனடாவில் இன்று காலமானார். இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஈழவேந்தன், பிரபாகரன் தலைமையிலான ஆயுதப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவர். 1990களில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழப் பிரச்னையை புரிய வைக்க, துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்தார். 2000ஆம் ஆண்டு மத்திய அரசு, தமிழ்நாட்டில் இருந்து ஈழவேந்தனை கனடாவுக்கு நாடு கடத்தியது.

News April 30, 2024

ஈழத் தமிழர்கள் ஆதரவாளர் ஈழவேந்தன் காலமானார்

image

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் MP-யும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடைசி வரை குரல் கொடுத்தவருமான ‘தோழர் ஈழவேந்தன்’ கனடாவில் நேற்று காலமானார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டிய அவர், வயது மூப்பு காரணமாக காலமானார். ஈழவேந்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!