India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரிடம் வேட்புமனுவை பெற்ற தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் தமிழர் ஆவார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், 2006ல் ஐபிஎஸ் தேர்வில் வென்று உ.பி. அலிகரில் பணியை தொடங்கினார். தொடர்ந்து, மீண்டும் குடிமைப் பணி தேர்வெழுதி 2009இல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், மோடியின் அபிமானத்தை பெற்றவர் ஆவார்.
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து, மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம், அடுத்த மாதம் மற்ற நாடுகளுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பயனர்கள் தேடும் கேள்விகளுக்கு AI சுருக்கமான பதிலை முதல் பக்கத்தில் காண்பிக்கும்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். 6 Four, 5 Six என விளாசிய அவர் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இதனால், டி20 போட்டிகளில் அதிகமுறை 50+ ரன்களுக்கு மேல் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 1. பாபர் அசாம்-39, 2.விராட் கோலி-38, 3.ரோஹித் ஷர்மா-34, 4.முகமது ரிஸ்வான்-29 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள் இணையத்தை பயன்படுத்தியதால் முடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், பள்ளி மாணவர்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து, பிரபல டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஷியாம் ரங்கீலா, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். பிரதமர் மோடியை போல மிமிக்கிரி செய்து கவனம் ஈர்த்த அவர், தற்போது அவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் ₹7 சொத்து மதிப்புடன் ஒருவர் களத்தில் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆந்திராவின் பபாடியா தனித் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வெறும் ₹7 மட்டுமே சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்தபடியாக, மகாராஷ்டிராவின் பீம்சேனா வேட்பாளர் சந்தோஷ் உபாலே, ₹83 சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ தோல்வியை தழுவியதால் சிஎஸ்கே அணிக்கு ப்ளே-ஆஃப் வாய்ப்பு எளிதாகியிருக்கிறது. மே 18ஆம் தேதி நடைபெறும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் நிச்சயமாக ப்ளே-ஆஃப் செல்லலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. தோற்றாலும், ரன்-ரேட் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. வெல்லுமா CSK?
AI உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பங்குச் சந்தையின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். BSE சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றார். F&O trading செய்யும் 10இல் 9 பேர் பணத்தை இழப்பதாக செபி வெளியிட்டுள்ள தரவுகளைக் குறிப்பிட்ட அவர், மக்களின் சேமிப்பு கரைவதை எண்ணி கவலை தெரிவித்தார்.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 16ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. ▶3 ஒருநாள் போட்டிகள் (ஜூன் 16, 19, 23) – பெங்களூரு, ▶1 டெஸ்ட் போட்டி (ஜூன் 28 – ஜூலை 1) – சென்னை, ▶3 டி20 போட்டிகள் (ஜூலை 5, 7, 9) – சென்னை. சமீபத்தில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய அவர், கங்கை ஆறு ஒரு தாயைப் போல அனைவரையும் காப்பதாக உணர்ச்சிவயப்பட்டு பேசினார். கங்கை தன்னை வலுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.