India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1980இல் வெளியான ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாடகி உமா ரமணன். எம்.எஸ்.வி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களின் பாடல்களை பாடியுள்ள அவர், கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லு முல்லு, ஒரு கைதியின் டைரி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உன்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் நான் முற்றிலும் தொலைந்து போயிருப்பேன். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே. நமது உலகத்தின் வெளிச்சம் நீ. உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 133
▶குறள்: ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
▶பொருள்: ஒழுக்கம் உடையவராக வாழ்வது தான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும், அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தொடா்பில் இருந்த போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் ஐபிஎல் சூதாட்டம் நடத்தியதாக கடந்த ஏப்.28ஆம் தேதி, தீரஜ், கஜேஷ், சந்தீப், ராஜேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், சூதாட்ட கும்பலுடன் காவலர் காமேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவர, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை, வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், மா, பப்பாளி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், மாம்பழங்களுக்கு கிலோவுக்கு ₹50 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த் உடனான நிச்சயதார்த்தம், 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் நடந்ததாக நடிகை அதிதி ராவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்றும், தங்கள் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருந்ததால், இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதை அறிவித்தோம் என்றும் அவர் கூறினார்.
இன்று (மே 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக அவுட்டாகியுள்ளார். பஞ்சாப்பிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 7ஆவதாக களமிறங்கிய அவர், 1 Six, 1 Four என விளாசி 14 ரன்கள் விளாசி அசத்தினார். இதனிடையே, அர்ஷ்தீப் சிங் வீசிய 20ஆவது ஓவரின் கடைசி பந்தில், 2ஆவது ரன் ஓடும்போது ரன் அவுட்டானார். இதனால், ஒருமுறை கூட அவுட்டாகாத வீரர் என்ற பெருமையை இழந்தார்.
2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த முருகன், காரில் தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் அருகே வந்துக் கொண்டிருந்தார். அப்போது, கல்லூரி மாணவர்கள் வந்த காரும் முருகனின் காரும் மோதியது. இதில், முருகன், மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மகள் நித்திஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு நாளன்று 7 மணிக்கு வெளியிட்ட வாக்கு சதவிகிதமும், 11 நாட்கள் கழித்து வெளியிட்டுள்ள வாக்கு சதவிகிதமும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றும், இது EVM இயந்திரங்கள் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்து என்றும் அவர் தெரிவித்துள்ளர்.
Sorry, no posts matched your criteria.