India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶சுந்தர் சி, தமன்னா, யோகி பாபு, ராஷி கண்ணா நடித்த ‘அரண்மனை 4’, சாய் தன்ஷிகா, மைம் கோபி நடித்துள்ள ‘தி ப்ரூஃப்’, சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குரங்கு பெடல்’ ஆகிய 3 திரைப்படங்கள் மே 3ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. ▶அதேபோல், கவினின் ‘ஸ்டார்’, சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’, அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’, அமீரின் ‘உயிர் தமிழுக்கு ஆகிய 4 திரைப்படங்களும் மே 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன.
▶மே – 2, சித்திரை – 19 ▶கிழமை – வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM
▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM
▶குளிகை நேரம்: 9:00 AM – 10:30 AM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம் ▶திதி: நவமி
▶நட்சத்திரம்: 1:49 AM வரை அவிட்டம் பிறகு சதயம்
லக்னோ அணியின் நட்சத்திர பவுலர் மயங்க் யாதவ், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. GT-க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில ஆட்டங்களை தவறவிட்ட அவர், நேற்று முன்தினம் MI-க்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அப்போது மீண்டும் காயம் ஏற்பட, போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு வயிற்று பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
▶தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ▶ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால், அதில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். ▶வேறுவொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படும். ▶முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.
காலாவதியான அரசுப் பேருந்துகளுக்கு மாற்றாக, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், காலாவதியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதும், பாதுகாப்பில்லாத பேருந்து பயணங்களும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என்றும், பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
✍நேரம் தவறாமல் இருப்பவர் என்றும் கதாநாயகன் தான். ✍நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமம். ✍பணம் இருந்தால் தான் மரியாதை என்றால், அந்த மரியாதையே தேவையில்லை. ✍ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது, குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதற்கு சமம். ✍சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும். ✍எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.
CSK அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி, புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில், CSK-க்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த MI அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் CSK அணியைத் தொடர்ச்சியாக வீழ்த்தியுள்ளன. மே 5ஆம் தேதி நடைபெறும் அடுத்தப் போட்டியில், MI-இந்த சாதனையை பஞ்சாப் அணி முறியடிக்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
சடங்குகள் இல்லாத இந்து திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. சடங்குகள் இன்றி திருமணம் செய்து கொண்ட இருவர், விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சடங்கு இல்லாமல் நடந்த திருமணத்துக்கு, திருமணச் சான்றிதழ் அந்தஸ்து அளிக்காது என்றும், இந்து திருமண சட்டப்படி அதை திருமணமாக கருத முடியாது எனக்கூறி வழக்கை ரத்து செய்தனர்.
▶1933 – ஹிட்லர் தொழிற்சங்கங்களைத் தடை செய்தார். ▶1945 – பெர்லினைக் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ▶1986 – செர்னோபில் அணு உலை விபத்தால், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். ▶1998 – ஐரோப்பிய நடுவண் வங்கி தொடங்கப்பட்டது. ▶2002 – கேரளாவில் ஏற்பட்ட கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர். ▶2004 – நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இருப்பதாக கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல என்றும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்ட தேர்தல் பாஜகவுக்கு எதிராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.