news

News May 15, 2024

சென்னையில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு

image

‘தக் லைஃப்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, சென்னையில் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. டெல்லி மற்றும் ஜெய்சல்மரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாகவும், 30 நாள்கள் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் நடிகர் சிம்பு இடைவெளி இன்றி நடித்ததாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதால், படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 15, 2024

வாகனம் ஓட்டும்போது ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்?

image

வாகனங்களை ஓட்டும்போது செய்யக்கூடிய அபாயகரமான விஷயங்களில் ஒன்று ஃபோன் பயன்படுத்துவது. அதிலும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே மெசேஜ் செய்வது மனநோயாளியின் நடத்தையுடன் தொடர்புடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள 1,000 ஓட்டுநர்களிடம் நடத்திய ஆய்வில், சுமார் 600 பேர் வாகனம் ஓட்டும்போது ஃபோனை பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 15, 2024

இந்திய அணியை வழிநடத்துவது கௌரவம்

image

இந்திய அணிக்காக இன்னும் சில வருடங்கள் விளையாட விரும்புவதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியை வழிநடத்துவது என்பது மிகப்பெரிய கௌரவம் என்றும், தான் இந்த பொறுப்பிற்கு வருவேன் என்று ஒருநாளும் யோசித்தது கூட கிடையாது என்றும் கூறினார். மேலும், கேப்டனாக பொறுப்பேற்ற பின், அனைவரும் ஒரே திசையில் ஓட விரும்பியதாகவும், அது தான் சரியாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

News May 15, 2024

பெண் போலீஸ் தாக்கியதாக சவுக்கு புகார்

image

பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பெண் போலீசார் அழைத்து வந்தனர். அவர்கள் வாகனத்தில் வைத்து, தாக்கப்பட்ட இடத்திலேயே தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் முறையிட்டார். அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்துவிட்டு வருமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

News May 15, 2024

இனியும் அரசு உறங்கக் கூடாது

image

ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

News May 15, 2024

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிக்கும் ரியோ

image

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, ‘ஜோ’ படத்தில் நடித்த மாளவிகா மனோஜ் மற்றும் அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

News May 15, 2024

8ஆம் வகுப்பு பாட புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம்

image

9, 10ஆம் வகுப்புகளை தொடர்ந்து 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதியில், அவர் கொண்டுவந்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம்பெற்றுள்ளது. கை ரிக்க்ஷா ஒழிப்புத் திட்டம், மதிய உணவுத் திட்டம், சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

News May 15, 2024

SBI வைப்பு நிதி வட்டி உயர்த்தப்பட்டது

image

Fixed Deposit (FD) என்று சொல்லப்படும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.75% வரை உயர்த்தி அறிவித்திருக்கிறது SBI வங்கி. இன்று (மே 15) முதல் இந்த உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 46 முதல் 179 நாள்கள் வரையிலான FDக்களுக்கு ஆண்டு வட்டி 0.75% உயர்த்தப்பட்டு, 5.5%ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான FD வட்டி 0.25% உயர்த்தப்பட்டு, 6.25%ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News May 15, 2024

சச்சினின் பாதுகாப்பு காவலர் தற்கொலை

image

சச்சின் டெண்டுல்கரின் விவிஐபி பாதுகாப்பு காவலர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சச்சினின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர் பிரகாஷ் கப்டே, ஜாம்னர் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற அவர், தனிப்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

News May 15, 2024

26 ஆண்டுகளுக்கு பின் பக்கத்து வீட்டில் மீட்கப்பட்ட நபர்

image

அல்ஜீரியாவில் 26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர், பக்கத்து வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். 1998ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்று வந்தபோது, ஒமர் என்ற 19 வயது இளைஞர் காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் கருதினர். ஆனால், அவரது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் முதியவரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

error: Content is protected !!