India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் பிரையன் லாரா. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த தனிநபர் (400) என்ற அவரது சாதனையை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. 131 டெஸ்டில் 11,953 ரன்களும், 299 ODI போட்டிகளில் 10,405 ரன்களும் அவர் எடுத்துள்ளார். ‘தி பிரின்ஸ் ஆஃப் போர்ட் ஆஃப் ஸ்பெயின்’ என அழைக்கப்படும் பிரையன் லாராவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக நவீன், பெருமாள், சதீஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று PBKS-க்கு எதிரான போட்டியில் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக CSK-வின் தேஷ்பாண்டே விளையாடவில்லை. தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே முஸ்தஃபிசூர் நாடு திரும்பி விட்டார். தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பதிரனாவும் விசா நடைமுறைக்காக இலங்கை திரும்பியதால், CSK அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனதா தளம் மற்றும் பாஜக தலைவர்களுக்குப் பெண்கள் மீது மரியாதை இருந்தால், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டுமென, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை காங்கிரஸ்தான் வெளியிட்டதாக குமாரசாமி மறைமுகமாகக் குற்றம்சாட்டியது குறித்து பதில் அளித்த அவர், இதுபோன்ற மலிவான அரசியல் செய்ய வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்றார்.
வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா சோதித்து வருகிறது. அதாவது, வாட்ஸ்அப் கொள்கைகளை மீறும் பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதில் Chat செய்ய முடியாமல் முடக்கப்படலாம். இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், குழுக்களில் இருந்தும் மெசேஜைப் பெறுவதில் தடை இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்த அம்சம் சோதனை முறையில் இருப்பதால் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். கல் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே, சேதுராமன் என்பவர் கைதான நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கல்குவாரியால் பல சிக்கல்களை சந்திப்பதால் அதனை மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,715க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.87க்கும், கிலோ வெள்ளி ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.
பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீட்டின் வரலாறு தெரியவில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என காங்கிரஸ் உறுதி தருமா எனக் கேள்வி எழுப்பிய பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், தேர்தல் பிரசாரத்தில் மோடி உளறி வருவதாகக் கூறினார். அரசியலமைப்புப்படியே எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகக் கூறிய அவர், அந்தச் சட்டத்தை அமல்படுத்தியது காங்கிரஸ்தான் என்றார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரை சென்னை அணியின் தோனி எதிர்கொண்டார். அதில் 3ஆவது பந்தினை தோனி தூக்கி அடிக்க, எதிர் முனையில் இருந்து மிட்செல், ரன் எடுக்க ஓடிவந்தார். ஆனால், அவரை தோனி திருப்பி அனுப்பினார். ரன் குவிக்கும் நோக்கோடு தோனி திருப்பி அனுப்பியிருந்தாலும் மிட்செல் முன்னணி பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் இந்த செயல் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.
நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் மட்டுமல்ல, சினிமா நிகழ்வுகளில் பங்கேற்பதைக் கூட அஜித் தவிர்த்து வருகிறார். அப்படியிருக்கும் நிலையில், அவரை அதிமுக தலைவர்கள் விடுவதாக இல்லை. அவ்வப்போது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.