news

News May 15, 2024

ஆசியாவிலேயே மிகப்பெரிய மியூசிக் ஸ்டூடியோ

image

ஆசியாவிலேயே மிகப்பெரிய மியூசிக் ஸ்டூடியோ ஒன்றை துபாயில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமைந்துள்ளார். உலகின் விலையுயர்ந்த இசைக் கருவிகள், ரெக்கார்டர்கள், மிக்ஸர்கள், தேவைக்கேற்றவாறு அறையின் அளவினை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வகையில் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோவுக்கு ‘ஃபிர்தவுஸ் ஸ்டூடியோ’ என அவர் பெயரிட்டுள்ளார். ஃபிர்தவுஸ் என்ற பெர்சியா சொல்லுக்கு சொர்க்கம் என்று பொருளாம்.

News May 15, 2024

ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: ஓம் பிர்லா

image

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தவறான ஆட்சியால் சோர்ந்துவிட்ட மக்கள், ஒடிஸாவில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். புவனேஷ்வரில் பேசிய அவர், “கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் நலனுக்காக செயல்படாத அரசை மக்கள் இம்முறை தூக்கியெறிய முடிவெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் நடக்கும் மக்களவை & சட்டப்பேரவை தேர்தலில் பிஜேடி கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்” என்றார்.

News May 15, 2024

ராஜஸ்தான் அணி மோசமான சாதனை

image

கவுகாத்தியில் நடைபெற்றுவரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இப்போட்டியில் முதல் 10 ஓவர்கள் முடிவில் RR 4 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது. இதுவே நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 10 ஓவர்களுக்கு எடுக்கப்பட்ட குறைவான ரன்களாகும். முன்னதாக SRH அணி, LSG அணிக்கெதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்ததே குறைவான ரன்களாக இருந்தது.

News May 15, 2024

₹830 கோடி செலவில் ராமாயணம் முதல் பாகம்

image

ரன்பீர் கபூர் & சாய்பல்லவி நடிப்பில் உருவாகிவரும் ராமாயணம் படத்தின் முதல் பாகத்துக்கு ₹830 கோடி செலவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் தொழில் நுட்ப பணிகளுக்காக மட்டும் ஒரு ஆண்டை படக்குழு ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. உலகளவில் ரசிகர்களை கவரும் நோக்கில் உயர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுக்கின்றனர்.

News May 15, 2024

INDIA கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம்: மம்தா

image

மத்தியில் INDIA கூட்டணி ஆட்சிக்கு அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆதிர் ரஞ்சன் தலைமையிலான பெங்கால் காங்கிரஸ் & சிபிஎம் ஆகியவை பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளன. பாஜகவால் 200 இடங்களைக் கூட எட்ட முடியாது. அவர்களுடன் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பவர்களை மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்ட தயாராகிவிட்டனர்” எனக் கூறினார்.

News May 15, 2024

அடுத்த 2 நாளில் கவுன்சிலிங் தேதி?

image

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து கவுன்சிலிங் நடைபெறும் தேதியை பள்ளிக் கல்வித்துறை வெளியிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News May 15, 2024

பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரியான் பராக் (48), அஸ்வின் (28) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PBKS தரப்பில் ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News May 15, 2024

இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்

image

இந்தியா பலவீனமான நாடு அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறிவிட்டது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என பலர் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சிகளை விமர்சித்தார். மேலும், பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

News May 15, 2024

புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்?

image

மகளிர் உரிமைத் தொகை ₹1000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு ₹1000 கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, விடுபட்ட தங்களுக்கு பணம் கிடைக்க செய்யுமாறு தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 15, 2024

மன்னிப்பு கேட்டது REDPIX நிறுவனம்

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரும், அவரை பேட்டியெடுத்ததாக REDPIX யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேச்சில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அந்த காணொளியால் பெண் காவலர்கள் வருத்தமடைந்துள்ளதால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் REDPIX நிறுவனம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!