India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கட்சி தொகுதிகளை அடுத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 1967க்கு பிறகு 57 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வளராமல் அதே இடத்தில் உள்ளதாக கூறிய அவர், இந்த நிலை மாறி விரைவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலைக்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்றார். பதவியை அனுபவித்த பலர் கட்சிக்காக உழைக்காமல் ஓய்வெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
➤1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்.
➤1667 – யாழ்ப்பாணத்தில் வாக்கிய பஞ்சாங்கம் ராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
➤2005 – குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.
➤2003 – மொரோக்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
➤2006 – நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என ம.பி முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் அமைச்சர் கைது தொடர்பாக பேசிய அவர், அதிகாரத்தின் மூலம் ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை, பிரதமர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பார் என்றார். பண மோசடி விவகாரத்தில் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலமை, அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் அனைத்து வீரர்களும் அழுத்தத்தை உணர்வதாக தெரிவித்த அவர், அன்றைக்கு சிறப்பாக விளையாடும் அணியே வெற்றிபெறும் என்றார். ஒரு போட்டியை எப்படி சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதில் கோலி மிகவும் திறமையானவர் என்றும் அவர் பாராட்டினார்.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
◾விளக்கம்:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த நிலையில், தற்போது ராதிகாவை விமர்சித்துள்ளார். இந்த முறை அவரை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமேதியில் ஸ்மிருதி இரானி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 2019 வெற்றிக்கு பிறகு ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய கெலாட், இந்த முறை மக்கள் அவருக்கு தோல்வியை தர தயாராகி விட்டார்கள் என்றார். அமேதியில் கடந்த முறை ராகுலை, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.
ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசாவில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடிய நீரஜ் சோப்ரா, இறுதியில் 82.27 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.
இப்போட்டியில் டி.பி. மானு வெள்ளி பதக்கமும், உத்தம் பட்டீல் வெண்கல பதக்கமும் வென்றனர்.
இன்று (மே 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி பொம்மை தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவது ஒருபோதும் நடக்காது என்ற அவர், பாஜகவின் தோல்வி முடிவு செய்யப்பட்ட ஒன்று எனக் கூறினார். நாட்டில் பொதுமக்களின் போராட்டங்களை தேர்தல் அதிகாரிகள் ஒருபோதும் உணர்ந்து கொள்ள போவதில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.