India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கிய எம்பி பிரிஜ்பூஷனுக்குப் பதிலாக அவரது மகனுக்கு மக்களவைத் தேர்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கெய்சர்கஞ்ச் தொகுதியில் பிரிஜ்பூஷண் மீண்டும் போட்டியிடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பாஜக இம்முறை வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு பதில், மகன் கரண்சிங் பூஷண் சிங்கை அறிவித்துள்ளது.
கோலி, சூரியகுமாரை விட ஹர்திக் பாண்டியா சிறந்த வீரர் என்று முன்னாள் வீரர் முகம்மது கைப் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை அணிக்கு ஹர்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கைப் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கூறிய அவர், ஐசிசி போட்டிகளில் கோலி, சூரியகுமாரை விட ஹர்திக் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் எனத் தெரிவித்தார்.
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம்முடைய மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு, ஆசியா, ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்நிலையில், 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் குகையில் வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் தற்போது மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஆறாம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தைப் பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டுமென MNMK கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2 ஆண்டுகளாகப் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் விமர்சனம் செய்தும், சர்ச்சைக்குரிய சீட்டுக்கட்டுகள் குறித்த பாடப்பகுதியை நீக்காமல் பாடநூல் கழகம் அலட்சியம் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியோருக்கு ரத்தம் உறைதல், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டன. இதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியோருக்கு ரத்தம் உறைதல், பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என அந்த நிறுவனம் கூறியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ’25 years of Pan india swag’ என்ற பெயரில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மனோஜ் இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் 4 கண்டெய்னர் லாரிகளில் ₹2,000 கோடி சிக்கியது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்பேரில் கொச்சினில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு ₹500 கோடி, பெடரல் வங்கிக்கு ₹1,000 கோடி, எச்டிஎப்சி வங்கிக்கு ₹500 கோடி கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆவணங்களை சரிபார்த்ததில் உறுதியானதால் லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசம் தலைமையிலான அணியில், அப்ரார் அகமது, ஆசம் கான், ஹசன் அலி, இஃப்திகார் அகமது, முகமது அமீர், முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடர் மே 5ஆம் தேதியும், இங்கி., எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடர் மே 22ஆம் தேதியும் தொடங்க உள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜஹாங்கீராபாத் பகுதியில் மோகித் என்ற இளைஞரைப் பாம்பு கடித்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது, கங்கை நதியில் உடலை வைத்தால் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூற, இளைஞரின் உறவினர்கள் அவரின் உடலைக் கயிறு கட்டி 2 நாள்களாகக் கங்கை நதியில் போட்ட நிலையில், விஷம் தலைக்கேறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவுக்குச் சொந்தமான தீவுகளை சாட்டிலைட் சர்வே மூலம் தான் கண்டறிந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஜூனாகத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம் லீக்கின் மொழியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எழுதப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம். ஆனால் அதனை மீண்டும் கொண்டு வருவோமென அரச குடும்பத்தினர் வெளிப்படையாகக் கூறி வருவதாகவும் சாடினார்.
Sorry, no posts matched your criteria.