India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குநர் நெல்சன், கவின் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஃபிளெமென்ட் பிக்சர்ஸ்’ என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள நெல்சன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிக்க உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், மே 3ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். கவின் நடிக்கும் படம் தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க உள்ளார்.
பக்தி மார்க்கமாக வெள்ளியங்கிரி மலை ஏறியவர்களில் இந்த ஆண்டு மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சோளிங்கர் மலை ஏறிய ஒருவர் மரணமடைந்திருக்கிறார். வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில் மலையேறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உடல் உஷ்ணமடைதல், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை உயிரையே பறிக்கலாம். முறையான பயிற்சி இல்லாதவர்கள் மலையேறுவதைத் தவிர்த்திடுங்கள். பொதுநலன் கருதி வெளியிடுவது Way2News.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணையவழி சூதாட்டம், பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, இந்தத் தடையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மீறுவோருக்கு 1-3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ₹5-₹10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் வெளிநாடு செல்ல அனுமதி பெறவில்லையென வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ம.ஜ.த வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம், ‘ராஜாங்க பாஸ்போர்ட் வைத்துள்ளதால் அவருக்கு ஜெர்மனி செல்ல விசா தேவையில்லை. பிரஜ்வாலின் பாஸ்போர்ட்டை முடக்க நீதிமன்றம் இதுவரை உத்தரவிடவில்லை’ என விளக்கமளித்துள்ளது.
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை Red ஆகக் காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதைத் தடுக்க EVM வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது டிரோன் பறக்கத் தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளை Red Zoneஆக அறிவித்து, அவற்றின் மீது டிரோன் பறப்பதற்குக் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.
மற்றொருவர் தலைமையில் விளையாடுவது தனக்குப் புதிதல்ல என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன், அதைக் கடந்த ஒரு மாதமாக மீண்டும் செய்ய முயற்சித்தேன்” எனக் கூறினார். மேலும், கேப்டன் பொறுப்பு என்பது வந்து போகும், அது கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.
நல்ல கதை அமைந்தால் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார். சினிமா துறைக்கு வந்த பிறகு தான் சந்தித்த முதல் ஆள் சூர்யா தான் என்ற அவர், நீண்ட காலம் நண்பர்களாகவே இருந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். 1999இல் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்தார்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஹிட் அடித்தன.
அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. 46 வயதான செங் சேபன், கடந்த 8 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். பவர்பால் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் அவருக்கு இந்திய மதிப்பில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதில் வரிப் பிடித்தம் போக அவருக்கு ₹3,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது சமூக வலைத்தளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சமூக வலைத்தளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாதெனக் கருத்து தெரிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக மே 6க்குள் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், துணிக் கடை ஓனருமான விக்கி (எ) விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். N.N.கார்டன் பகுதியில் KGF என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி. இவரது கடையில் வேலை பார்த்த ரிஸ்வான் என்பவரை, கடந்த மாதம் ஆள் வைத்து தாக்கியதாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விக்கியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் புழல் சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.