India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் தேர்தலை உலகமே உற்று நோக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அசம்கரில் பிரசாரம் செய்த அவர், இந்தியாவின் தேர்தல் குறித்த செய்திகள் முதல்முறையாக உலக செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம்பெறுவதாகக் கூறினார். இதில் இருந்து நமது தேர்தலின் முக்கியத்துவத்தை உணரலாம் எனக் கூறிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் பேராதரவு இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி கருத்துகளை பரிமாற்ற வேண்டும் என்றும், தேர்ச்சி விகிதம் 100% இலக்கை எட்ட வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் இருக்கும் பகுதிகளை விடுத்து மாற்று வழியில் அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து பழுதாகி நின்றது. இந்நிலையில், அனைத்து ஓட்டுநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை கவனத்துடன் இயக்க உத்தரவிட்டுள்ளது.
கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டியிடுவதால், படத்தின் பணிகள் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவித்துள்ள நிலையில், X தளத்தில் Happy Retirement Legend என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் கோலி உள்ளிட்ட பிரபலங்களும் அவருக்கு அன்பை பரிமாறியுள்ளனர். தனது சகோதரரை நினைத்து பெருமை கொள்வதாக X பக்கத்தில் கோலி பதிவிட்டுள்ளார். குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே இன்று காலையில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று உருக்கமாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவித்த அவர், காயமடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாஜக 220 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெல்லும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். லக்னோவில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கெஜ்ரிவால், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி., பிஹார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் பாஜக கடந்த முறையை விட, குறைந்த இடங்களே வெல்லும் என பட்டியலிட்டார்.
இந்தியாவின் நம்பர் 1 தனியார் வங்கியான HDFC, விர்ச்சுவல் கிரெடிட் கார்ட் சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார்டுகளை கைகளில் வாங்க முடியாது. ஆனால், கார்டு நம்பர், CVV ஆகியவை உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அதனை பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தலாம். Visa கார்ட் நிறுவனத்துடன் இணைந்து HDFC இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் EDயின் கைதுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் ED மனு தாக்கல் செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை ED காவலுக்கு அனுப்ப வேண்டுமா, வேண்டாமா என சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அறிவித்துள்ளது.
சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து நேற்று பெண் காவலர்கள் திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதில், சங்கருக்கு காயங்கள் ஏதும் இல்லை என்றும் சவுக்கு சங்கர் பொய் சொல்கிறார் என்று காவல் துறையினர் நீதிபதியிடம் முறையிடவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.