India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மூத்த செய்தியாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த செய்தியாளரும், 2021ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோள் விருது பெற்றவருமான சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மின் பயன்பாடு 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசிவருவதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் ஃபேன், ஏசியை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை மின்தேவை 20,701 மெகாவாட்டாக இந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
ரேபரேலியில் ராகுலை எதிர்த்து பாஜகவின் தினேஷ் பிரசாத் சிங் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவின் முக்கிய தலைவரும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அவர், ராகுலுக்கு நெருக்கடி கொடுப்பார் என அக்கட்சி நம்புகிறது. 3 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், 2019 தேர்தலில் ரேபரேலியில் சோனியாவிடம் தோற்றார். இதுவரை 20 முறை அங்கு தேர்தல் நடந்த நிலையில், காங்கிரஸ் 17 முறை வென்றுள்ளது.
துணைவேந்தர்கள் ராஜினாமா செய்யும் அளவிற்குப் பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி நிலவுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை எனவும், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்குச் சம்பளம் தர முடியாத சூழலை அரசு கண்டுக்கொள்ளாதது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.
ஒருநாள், டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா 2, 3ஆவது இடங்களிலும் உள்ளன. டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 2, 3ஆவது இடங்களிலும் உள்ளன. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளன.
சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரில்லர், காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது. யோகிபாபு, கோவை சரளா, விடிவி கணேஷின் காமெடி சிறப்பாக இருப்பதாகக் கூறும் ரசிகர்கள், VFX காட்சிகளும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் குடும்பத்துடன் கலகலப்பாக பார்க்கலாம் என்கிறார்கள்.
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இம்மையம் அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என அவரது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 7ஆம் தேதி வரை, அடுத்த 5 நாள்களுக்கு தமிழக உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் வட தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மோடியின் பொய் பிரசாரத்தை பிரியங்கா காந்தி தனது தீவிரமான பரப்புரையால் ஒற்றை ஆளாக தவிடுபொடியாக்கி வருவதாக காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடாதது குறித்து விளக்கம் அளித்த அவர், பிரியங்கா நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் அவர் சுருங்கிவிடக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ரயிலில் பயணிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அபாயச் சங்கிலி குறித்து தெரிந்திருக்கும். இதைப் பிடித்து இழுத்தால், ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து அவர் ரயிலை நிறுத்துவார் என நினைப்போம். ஆனால், அது முற்றிலும் தவறு. ரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலிகள் பிரேக் பிரஷர் உடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். அதைப் பிடித்து இழுக்கும்போது, பிரஷர் ரிலீஸாகி வேகம் வெகுவாகக் குறைந்து ரயில் தானாக நிற்கும்
Sorry, no posts matched your criteria.