India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி போட்டியிட்டாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கைபடி NDA வேட்பாளரே வெற்றி பெறுவார் என H ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், R வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் துணை ஜனாதிபதியாக வராததால் திமுக MP-க்கள் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார். அதிக முறை தமிழகத்துக்கு வந்த PM மோடி, மக்களுக்கு அள்ளி கொடுத்துள்ளார் என்றார்.
சின்ன வெங்காயத்தை அரைத்துப் பூசினால் வழுக்கைத் தலையில்கூட முடி வளரும் என்று சொல்லப்படுவதை அரோமாதெரபிஸ்ட்டுகள் மறுத்துள்ளனர். கந்தகத்தன்மை (சல்ஃபர்) அதிகமுள்ள சின்ன வெங்காயத்தின் சாற்றை தலைமுடியில் பூசினால், முடி மெலிந்து, உடையும் என்கிறார்கள். மேலும், தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையை அகற்றி, வறண்டுபோக செய்து, முடி உதிர்வு & வழுக்கை பாதிப்பை மோசமாக்கும் என எச்சரிக்கின்றனர். SHARE IT.
CM ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல், மயக்கம் காரணமாக அவர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரியிலும் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவர் நேரடி அரசியலில் இல்லையென்றாலும், உதயநிதி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கொடைக்கானல், தென்காசி ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் NIA சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக, திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள ஷேக் அப்துல்லா (SDPI), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த யூசிப் ஆகியோரது வீடுகளிலும் NIA சோதனை நடைபெற்று வருகிறது. பாமகவின் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இச்சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் NIA சோதனை நடத்தியது.
NDA கூட்டணி வேட்பாளர் CPR வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெருமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, அதே சமயம் பல திட்டங்கள் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். கூட்டணி குறித்து ஜனவரியிலேயே அறிவிப்பதாக கூறியுள்ள தேமுதிக, NDA வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான M.Ed. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.11-ல் தொடங்கியது. இப்பாடப்பிரிவில் 6 அரசுக் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்நிலையில் இதற்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஆக.20) நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
SA vs AUS இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 98 ரன்கள் வித்தியாசத்தில் SA வென்றது. SA அணியில் மார்க்ரம் பொறுப்புடன் விளையாடி 81 பந்துகளுக்கு 82 ரன்கள் அடித்தார். அந்த அணியில் அதிக ரன்கள் அடித்தது அவர் தான். அதைப்போல் ஆஸி., அணியில் மிட்சல் மார்ஷ் 88 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் IPL-ல் LSG அணிக்காக சிறப்பாக விளையாடிய நிலையில், தற்போது அதே பார்மை தொடர்கின்றனர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் NDA சார்பில் போட்டியிடும் CPR-க்கு எதிராக I.N.D.I.A கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். தமிழரான CPR-க்கு திமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதாக வெளிப்படையாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடந்ததாக ஜாய் கிரிஸில்டா X தளத்தில் பதிவிட்டார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், சில நாள்கள் முன்பு, ரங்கராஜ் தன் முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட <<17386595>>போட்டோஸ் <<>>வைரலானது. இதுவே குழப்பமாக இருந்த நிலையில், ரங்கராஜுடன் Trip சென்றுள்ள வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ளார். புரியலயே?
கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக நிதி கொடுத்ததாக வெளியான செய்திக்கு அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியுமா என EPS கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் பரப்புரையில் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த 2.0, 3.0 என கடைசி வரை ‘ஓ’ போட்டதுதான் மிச்சம் என்றும் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.